விஜய் சூப்பர் ஸ்டாராக இருப்பதற்கு இதுவே காரணம்...சீமான் பேச்சு!

விஜய் சூப்பர் ஸ்டாராக இருப்பதற்கு இதுவே காரணம்...சீமான் பேச்சு!

தனது கடின உழைப்பால் விஜய் சூப்பர் ஸ்டாராக இருக்கிறார் என்று இரும்பன் இசை வெளியீட்டு விழாவில் சீமான் தெரிவித்துள்ளார்.

இரும்பன் இசை வெளியீட்டு விழா:

ஜூனியர் எம். ஜி.ஆர் நடிப்பில், இயக்குனர் கீரா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “இரும்பன்”. இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சத்யா மெட்ரிகுலேஷன் பள்ளியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், விசிக தலைவர் திருமாவளவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிக்க: இனி 5 அடி கரும்புகளையும் கொள்முதல்...அமைச்சர் அறிவிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி!

கடின உழைப்பு வேண்டும்:

பின்னர் மேடையில் பேசிய சீமான், ஜூனியர் எம். ஜி.ஆர் நீங்கள் சினிமாவில் வருவதற்கு எம். ஜி.ஆர் பெயர் உதவி இருக்கலாம். ஆனால், இங்கு வெற்றி பெற கடுமையான உழைப்பு வேண்டும். எம். ஜி.ஆர் கடுமையான உழைப்பை கொட்டியதால் தான், இன்று வரை எல்லோரது மனதிலும் அவர் நிலைத்து நிற்கிறார். எனவே, நீங்கள் உங்கள் கடின உழைப்பை போட வேண்டும் என்று கூறினார். 

விஜய் ஒரு சூப்பர் ஸ்டார்:

அதேபோன்று, விஜய் திரையுலகில் அப்பாவின் மூலம் வந்தாலும், தனது கடின உழைப்பால் இப்போது சூப்பர் ஸ்டாராக இருக்கிறார் என்று விஜய் குறித்து புகழ்ந்து கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், முதலில் இரும்பன் படத்திற்கு “குறவன்” என்ற பெயரையே வைத்திருந்தனர். அதனை நான் தான் மாற்ற சொன்னேன் என்று தெரிவித்த அவர், தமிழ் இனத்தின் ஆதிக்குடி குறவன் குடிதான். முதலில் மனிதன் பேசிய மொழி தமிழ் என்று கூறினார்.