சென்னை : நவீன வசதிகளுடன் கூடிய புதிய முனையம்..! மத்திய அமைச்சர் ஆய்வு..!

சென்னை : நவீன வசதிகளுடன் கூடிய புதிய முனையம்..! மத்திய அமைச்சர் ஆய்வு..!

சென்னை விமான நிலையத்தில் ரூ.2,467 கோடியில் 2.20 லட்சம் சதுர மீட்டரில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய முனையம் மத்திய விமான போக்குவரத்து துறை மந்திரி வி.கே. சிங் ஆய்வு மேற்கொண்டார். 

சென்னை விமான நிலையத்தில் உள்நாடு, பன்னாட்டு  முனையங்களை இணைத்து புதிய நவீன முனையம் அமைக்கும் பணி கடந்த 2018 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதற்கு பிரதமா் மோடி கானோளி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினாா். ரூ.2,467 கோடி மதிப்பீட்டில் 2,20,972 சதுர மீட்டா் பரப்பில் கட்ட திட்டமிடப்பட்டது. 

இந்த பணிகள் 2 கட்டங்களாக செய்ய முடிவு செய்யப்பட்டது. முதல் கட்ட பணியில் 6 அடுக்கு மல்டி லெவல் காா் பாா்க்கிங், நவீன வசதிகளுடன் வருகை, புறப்பாடு, முனையம் ஆகியவைகளும் பயணிகளுக்கு பாதுகாப்பு சோதனை, குடியுரிமை சோதனை, சுங்கச் சோதனை ஆகியவைகளுக்கான விசாலமான கூடங்கள், கூடுதல் கவுண்டா்கள், விவிஐபிக்களுக்காக ஓய்விடங்கள், பயணிகள் தங்கும் அறைகள் உள்ளிட்டவைகள் கட்டப்பட்டன.

விமான நிலைய முதல் கட்ட பணி பன்னாட்டு வருகை முனையம் 42,300 சதுர அடியில் கட்டப்பட்டு நிறைவடையும் நிலையில் உள்ளது. இந்த மாதம் இறுதிக்குள் நவீன வசதிகளுடன் கூடிய முதல் கட்ட புதிய முனையங்களை திறக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதையடுத்து திறப்பு விழாவிற்கு தயாராகி கொண்டு இருக்கும் புதிய நவீன முனையத்தை மத்திய விமான போக்குவரத்து துறை இணை அமைச்சா் வி.கே.சிங் ஆய்வு செய்தாா். அப்போது அதிகாரிகளிடம் சில விளக்கங்களை கேட்டு அறிந்தாா். பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறித்தினாா். அவருடன் விமான நிலைய இயக்குனர் சரத்குமார் உள்பட அதிகாரிகள் சென்றனர். 

இந்த புதிய முனையத்தின் திறப்பு விழா ஜனவரி மாத இறுதிக்குள் பயன்பாட்டிற்கு வரும். இந்த புதிய முனையம் செயல்பாட்டிற்கு வந்ததும் தற்போது பயன்பாட்டில் உள்ள பன்னாட்டு வருகை முனையம் கட்டிடம் இடிக்கும் பணி தொடங்கும். அதன் பின் இரண்டாம் கட்ட கட்டுமான பணி தொடங்கப்படும். இதையடுத்து சென்னை விமான நிலையத்தை பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை வரும் 2024ம் ஆண்டு டிசம்பரில் 35 கோடியாக இருக்கும். தற்போது பயணிகள் எண்ணிக்கை 17 கோடியாக உள்ளது என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையும் படிக்க : வெளி நாடுகளில் இருந்து இந்தியா வருவோர் கவனத்திற்கு...! ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை கட்டாயம்...!