"இது எங்க மான பிரச்சனை அப்புறம் வேறமாறி ஆயிடும்"!!!... வாரிசு பட ரிலீஸ் பற்றி டீஸர் வெளியிட்டு  விழாவில் இயங்குனர்கள் ஆவேச பேட்டி...

"இது எங்க மான பிரச்சனை அப்புறம் வேறமாறி ஆயிடும்"!!!... வாரிசு பட ரிலீஸ் பற்றி டீஸர் வெளியிட்டு  விழாவில் இயங்குனர்கள் ஆவேச பேட்டி...

ஆந்திராவில் தமிழ் படத்தை ரிலீஸ் பண்ண கூடாது என்ற புகார் எழுந்துள்ள நிலையில் இது தங்களுக்கு மான பிரச்சனை என்று மனம் கொதித்து இயக்குனர் லிங்குசாமி  மற்றும் இயக்குனர் பேரரசு சென்னை வளசரவாக்கத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.

 இயக்குனர் லிங்குசாமி ஆவேச பேட்டி :

சென்னை : வளசரவாக்கத்தில் உள்ள தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தில் இயக்குனர் வேலுதாஸ் இயக்கி நடிகர்கள் விமல், சதீஷ் மற்றும் பலர் நடித்துள்ள "துடிக்கும் கரங்கள்" படத்தின் டீஸர் வெளியீட்டு விழா நடைபெற்றுது.இந்த விழாவில் இயக்குனர்கள் லிங்குசாமி, பேரரசு, எழில் மற்றும் நடிகர் ரமேஷ் கண்ணா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.படத்தின் டீசரை வெளியிட்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய இயக்குனர் லிங்குசாமி கூறியது... 

இந்த காலம் சினிமாவின் பொற்காலம் பல காலகட்டங்களாக பேன் இந்தியா என்ற பெயரில் தமிழ் தெலுங்கில் பல்வேறு படங்கள் வெளி வந்துள்ளது என்றும் இங்கு திரையிடப்படும் படத்தை எங்கோ ஒரு மாநிலத்தில் உட்கார்ந்து ரசிகர்கள் ஓ.டி.டி. யில் பார்க்கின்றனர் எனக் கூறிய அவர் முக்கியமான காலகட்டத்தில் இது போன்ற பிரச்சனை வரவே கூடாது தமிழ் படத்தை ரிலீஸ் பண்ண கூடாது என்று சொன்னால் அதை வார்த்தைகளால் சொல்ல முடியாது அந்த அளவிற்கு அது பிரச்சனையாகும் வாரிசுக்கு முன்னும் பின்னும் என்று பெரிய விஷயம் ஆக மாறிவிடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் பேசிய அவர் மிகத் தரமான ஆட்கள் இரண்டு இடங்களிலும் உள்ளனர் அவர்கள் பேசி இதற்கு சுகமான முடிவை எடுக்க வேண்டும் என்றும் ராஜமவுலி எடுக்கும் பாகுபலி மற்றும் ஆர்.ஆர்.ஆர் தமிழகத்தில் பெரிதாக போகிறது ,தமிழகத்தில்  எடுக்கும் படங்கள் அங்கு பெரும் ஹிட் ஆகிறது எனக் கூறிய அவர் சங்கர் அவர்களின் திரைப்படம் எத்தனையோ படங்கள் ஆந்திராவில் வெளிவந்துள்ளது, குறுகிய எண்ணத்தோடு யாராவது நினைத்திருந்தார்கள் என்றால் அந்த நினைப்பை உடனே மாற்ற வேண்டும் அது யாராக இருந்தாலும் சரி அதை மாற்றவில்லை என்றால் வாரிசுக்கு முன்னும் பின்னும் என்று சினிமா மாறிவிடும் அதை எல்லாரும் தலையிட்டு   படத்தை வெளியிட வேண்டும், தெலுங்கு ப்ரொடியூசர் பண்ணிருக்க படம் அது, இது பிரச்சினையாகவே ஆக்க கூடாது இது சின்ன ஒரு சலசலப்பு கூடிய விரைவில் விலகிவிடும் விலகவில்லை என்றால் அது விளகரத்திற்கான அனைத்து விஷயங்களை நாங்கள் நின்று செய்வோம் என்று ஆவேசமாக பேசியுள்ளார்.

மேலும் தெரிந்து கொள்ள ///  பரபரவென உருவாகி வரும் “ஜெயிலர்”... மரண வெயிட்டிங்கில் ரசிகர்கள்...

இயக்குனர் பேரரசு ஆவேச பேச்சு :

சங்கராந்தி பொழுது தெலுங்கு படத்திற்கு தான் முக்கியத்துவம் கொடுப்போம், வாரிசை தள்ளி போடுங்க என்று சொல்வது நம்மளை அவமான படுத்துவது போல் உள்ளது ,மேலும் இது தமிழர்களை கேனையன் ஆக்குவது போல் உள்ளது  என பேட்டி அளித்துள்ளார்.ஆந்திரா ,கேரளா, கர்நாடகாவில் "திராவிடம்" என்ற வார்த்தை இல்லை தமிழனை திராவிடனாக பார்ப்பதில்லை,தமிழனாகத்தான் பார்க்கிறார்கள் அதற்கான ஒரு உதாரணம் தான் இது என கண்டனம் தெரிவித்துள்ளார்.தமிழர்களுக்கு இது ஒரு மானப் பிரச்சனை, வாரிசு ஆந்திராவில் ரிலீஸ் ஆகவில்லை என்றால் தெலுங்கு, கர்நாடக, மலையாள படங்கள் இங்கு ரிலீசாகாத அளவிற்கு பிரச்சனைகள் பெரிதாக வர வாய்ப்புள்ளது.இது ரோஷத்தையும் உணர்வையும் தூண்டும் விஷயமாக உள்ளது என்றும் கூறியுள்ளார்.

ஜனவரி 14 தமிழகத்தில் பொங்கல் பண்டிகை அங்கு சங்கராந்தி இங்கு வாரிசு ரிலீஸ் ஆகிறது அதே நேரத்தில் ஆந்திராவில் தெலுங்கு படத்தை ரிலீஸ் செய்ய ப்ளான் செய்வதாகவும், இதில் கொடுமை என்னவென்றால் தயாரிப்பாளர் தெலுங்கு, இயக்குனரும் தெலுங்கு ஹீரோ மட்டும் தான் தமிழ்  என்றும் தமிழ் ஹீரோவை வைத்து தான் அவர்கள் கார்னர் செய்கிறார்கள் தெலுங்கு ப்ரொடியூசர் தெலுங்கு இயக்குனர் அனைவரும் தெலுங்கு ஆட்கள் என்று கூறிய அவர் தமிழ் திரையுலகில் தமிழர்கள் பெருமைக்குரியவர்கள் பெருந்தன்மை கூறியவர்கள் பாகுபலி வந்துள்ளது ட்ரிபிள் ஆர் வந்துள்ளது காந்தாரம் வந்துள்ளது கே ஜி எஃப் வந்துள்ளது அதை அனைத்தும் தூக்கி வைத்துக் கொண்டாடினோம் என்று கூறினார்.

மேலும் பேசிய அவர் போன பொங்கலுக்கு பிஸ்டுடன் கே ஜி எஃப் வந்தது அந்தப் படத்தையும் தமிழர்கள் தூக்கி வைத்துக் கொண்டாடினர், ரசிகர்கள் புகழ்ந்தனர், தமிழ் டிஸ்ட்ரிபியூட்டர்கள் யாரும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று கூறிய அவர் தமிழ் திரையுலகம் பெருந்தன்மையோடு எல்லா மொழி படங்களையும் சினிமாக்கு வேறுபாடு இல்லாமல் பார்க்கிறது என்றும் சங்கராந்தி பொழுது தெலுங்கு படத்திற்கு தான் முக்கியத்துவம் கொடுப்போம், வாரிசை தள்ளி போடுங்க என்று சொல்வது நம்மளை அவமானம் படுத்துவது போல் உள்ளது இது தமிழர்களை கேனையன் ஆக்குவது போல் உள்ளது என்று கொந்தளித்தார்.

தொடர்ந்து பேசிய அவர் நாங்கள் அனைத்து முழு படங்களையும் ஏற்றுக் கொள்வோம் தமிழ் படத்தை மட்டும் நீங்கள் வேறுபாடு காட்டுகிறீர்கள் இதற்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் குரல் கொடுக்க வேண்டும் அவர்கள் விட்டால் கூட பொதுவாக உள்ள சேம்பர் அமைப்பு அங்கு என்ன செய்து கொண்டு உள்ளார்கள் என்று கேள்வி எழுப்பியதோடு இதை வெறும் படம் ரிலீஸ் என்று மட்டும் பார்த்து விட முடியாது தமிழ்நாட்டு மக்கள் அனைத்து மொழிகளையும் ஒன்றாக பார்க்கிறார்கள் நீங்க ஏன் தமிழ் மொழி என்று பிரித்துப் பார்க்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பிய பேரரசு தமிழ் உணர்வை அவாகள் தூண்டுவதாகவும், திராவிடம் திராவிடம் என்று தமிழர்கள்தான் கத்திக் கொண்டு உள்ளார்கள் தெலுங்கு கன்னடா மலையாளிகளை திராவிடம் என்று சகோதரர்களாக பார்க்கிறோம் ஆனால் ஆந்திரா கேரளா கர்நாடகாவில் திராவிடம் என்ற வார்த்தை இல்லை தமிழனை திராவிடனாக பார்ப்பதில்லை தமிழனாகத்தான் பார்க்கிறார்கள் அதற்கான ஒரு உதாரணம் தான் இது என்று கூறினார்..

இது ஒரு சாதாரண பிரச்சினையாக நம் கடந்து செல்ல முடியாது தமிழர்களுக்கு இது ஒரு மானப் பிரச்சனை என்றும் வாரிசு ஆந்திராவில் ரிலீஸ் ஆகவில்லை என்றால் தெலுங்கு கர்நாடக மலையாள படங்கள் இங்கு ரிலீசாகாத அளவிற்கு பிரச்சனைகள் பெரிதாக வர வாய்ப்புள்ளது. இது ரோஷத்தையும் உணர்வையும் தூண்டும் விஷயமாக உள்ளது என்று கூறி ஆவேசமாக பேட்டி அளித்தார்.

மேலும் தெரிந்து கொள்ள ///  கமலுடன் மோது..... விமலுடன் மோதாதே...! - கொந்தளிக்கும் விமல் ரசிகர்கள்...