"இந்தியாவின் முயற்சிகளுக்கு இந்த விருது அங்கீகாரம்" குடும்பநலத் துறை அமைச்சர்!!!

"இந்தியாவின் முயற்சிகளுக்கு இந்த விருது அங்கீகாரம்"  குடும்பநலத் துறை அமைச்சர்!!!
Published on
Updated on
1 min read

துல்லியமான தகவல் மற்றும் நம்பகமான சேவைகளின் அடிப்படையில் தரமான குடும்பக் கட்டுப்பாடு வசதிகளை அணுகுவதை உறுதி செய்வதில் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான இந்தியாவின் முயற்சிகளுக்கு இந்த விருது அங்கீகாரம் என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தாய்லாந்து வளைகுடாவின் கிழக்குக் கடற்கரையில் உள்ள பட்டாயாவில் குடும்பக் கட்டுப்பாடு குறித்த சர்வதேச மாநாடு நடைபெற்றது. இதில், 'நாடுகளின் பிரிவில்' 'லீடர்ஷிப் இன் ஃபேமிலி பிளானிங் விருதுகள்-2022' என்ற விருதை இந்தியா வென்றுள்ளது. 

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா ட்விட்டரில், இந்தியா மதிப்புமிக்க குடும்பக் கட்டுப்பாட்டுக்கான தலைமைத்துவத்தில் சிறந்த நாடு என்ற விருதை வென்றுள்ளது.

துல்லியமான தகவல் மற்றும் நம்பகமான சேவைகளின் அடிப்படையில் தரமான குடும்பக் கட்டுப்பாடு வசதிகளை அணுகுவதை உறுதி செய்வதில் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் இந்தியாவின் முயற்சிகளுக்கு இந்த விருது ஒரு அங்கீகாரமாகும் என பதிவிட்டுள்ளார்.

'நாடுகளின் பிரிவில்' எக்செல் விருது-2022 ஐப் பெறும் ஒரு நாடாக இந்தியா மாறியுள்ளது. இதுகுறித்து மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நவீன கருத்தடை முறைகளை கடைப்பிடிப்பதில் இந்தியா சிறப்பான முன்னேற்றம் கண்டுள்ளது எனவும் குடும்பக் கட்டுப்பாடு தொடர்பான தேர்வுகளைச் செய்ய தம்பதிகள் உதவியுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளது.  இது தேசிய குடும்ப நல ஆய்வு-5 தரவுகளிலும் பிரதிபலிக்கிறது எனவும் கூறியுள்ளது.

தேசிய குடும்ப நல ஆய்வு-5 தரவுகளை, தேசிய குடும்ப நல ஆய்வு-4 உடன் ஒப்பிடும்போது, ​​நாட்டில் மொத்த கருத்தடை பரவல் விகிதம் 54 சதவீதத்திலிருந்து 67 சதவீதமாக அதிகரித்துள்ளது.  அதேபோன்று, குடும்பக் கட்டுப்பாட்டுக்கான தேவை 13 சதவீதத்தில் இருந்து 9 சதவீதமாக கணிசமாகக் குறைந்துள்ளது. 

-நப்பசலையார்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com