தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரிகள்....! ஆன்லைன் மூலம் விற்பனை செய்த நபர்...!

தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரிகள்....! ஆன்லைன் மூலம் விற்பனை செய்த நபர்...!
Published on
Updated on
1 min read

கன்னியாகுமரியில் ஆன்லைன் மூலம் கேரளா மற்றும் பூட்டான் மாநில லாட்டரிகள் விற்பனை செய்து பணம் வசூலித்து வருவதாக கன்னியாகுமரி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து கன்னியாகுமரி போலீசார் கன்னியாகுமரி சர்ச் ரோடு சந்திப்பில் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகப்படும்படியாக சுற்றித்திரிந்த இளைஞர் ஒருவரை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். 

அதில் அவர் முகமது அசாருதீன்(23) என்பதும், தூத்துக்குடி பிரைன் நகரை சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது. மேலும் அவர் ஆன்லைன் லாட்டரிகளை விற்றது தெரிய வந்ததை தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர். அவர் ஆன்லைன் லாட்டரி விற்பனைக்காக பயன்படுத்திய 2 செல்போன்கள் மற்றும் ரூ.13 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவற்றை போலீசார் அவரிடம் இருந்து பறிமுதல் செய்தனர். இது குறித்து கன்னியாகுமரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com