செல்போன் மூலம் பிரசவம் பார்த்த செவிலியர்...மருத்துவர்கள் இல்லாததால் நிகழ்ந்த விபரீதம்...தாய் சேய்க்கு நடந்தது என்ன?

செல்போன் மூலம் பிரசவம் பார்த்த செவிலியர்...மருத்துவர்கள் இல்லாததால் நிகழ்ந்த விபரீதம்...தாய் சேய்க்கு நடந்தது என்ன?

கள்ளக்குறிச்சியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர் இல்லாததால் செல்போன் மூலம் செவிலியர் பிரசவம் பார்த்ததால் தாய், சேய் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஆரம்ப சுகாதார நிலையம் :

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள கல்வராயன் மலைப்பகுதியான ஆலனூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் தான் இந்த பாக்யராஜ் -  மல்லிகா தம்பதியினர். இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த தனது மனைவி மல்லிகாவை அப்பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்றிரவு பாக்யராஜ் சேர்த்துள்ளார்.

இதையும் படிக்க : மாவட்ட ஆட்சியர்களுக்கு அவசர அவசரமாய் கடிதம் எழுதிய இறையன்பு...எதற்காக தெரியுமா?

செல்போன் மூலம் பிரசவம் :

ஆனால் கர்ப்பிணி பெண்ணுக்கு மருத்துவம் பார்ப்பதற்கு மருத்துவர் இல்லாததாலும், பிரசவத்திற்கான மருத்துகள் எதுவும் இல்லாததாலும், செவிலியர் ஒருவர் மருத்துவரை தொடர்பு கொண்டு செல்போன் மூலம் மல்லிகாவுக்கு பிரவசம் பார்த்துள்ளார்.

தாய்  - சேய் உயிரிழப்பு :

மருத்துவர் இல்லாமல் செவிலியர் பிரசவம் பார்த்ததால், தாய் மல்லிகாவும், அவருக்கு பிறந்த ஆண் குழந்தையும் பரிதாபமாக உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து, செவிலியரின் தவறான சிகிச்சையே தாய் சேய் உயிரிழப்புக்கு  காரணம் என  கூறி சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக அவரது உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.