ஊதியம் கூட தர முடியாத நிலைக்கு தள்ளப்பட்ட நாட்டின் பொருளாதாரம்....என்ன செய்யபோகிறது அரசாங்கம் ?!!!
பட்ஜெட்டில் ஒவ்வொரு அமைச்சகத்துக்கும் ஒதுக்கப்பட்ட நிதியில் 5 சதவீத செலவினங்களை குறைத்துக் கொள்ளுமாறு அமைச்சர்களுக்கு அதிபர் ரணில் விக்ரமசிங்கே உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்தி குறிப்பில்,
இலங்கை கருவூலம் கடுமையான நிதி தட்டுப்பாட்டில் உள்ளது. அதனால், பட்ஜெட்டில் ஒவ்வொரு அமைச்சகத்துக்கும் ஒதுக்கப்பட்ட நிதியில் 5 சதவீத செலவினங்களை குறைத்துக் கொள்ளுமாறு அமைச்சா்களுக்கு அதிபர் ரணில் விக்ரமசிங்கே உத்தரவிட்டுள்ளார்.
மேலும் தெரிந்துகொள்க: வாருங்கள் ஒன்றாக போராடலாம்... புதிய பொருளாதார கொள்கையோடு இலங்கை...வெற்றி பெறுவாரா புதிய அதிபர்!!!
இந்நிலையில், ஜனவரி, பிப்ரவரி மாதங்களுக்கு அரசு ஊழியர்களுக்கு ஊதியம் அளிப்பதிலும் பிரச்சினை எழுந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
-நப்பசலையார்
இதையும் படிக்க: ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு பிறகு வானில் நிகழவுள்ள அதிசயம்....