”நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிக்கு இது அச்சாரமாக...” நன்றி தெரிவித்த முதலமைச்சர்!!!

”நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிக்கு இது அச்சாரமாக...” நன்றி தெரிவித்த முதலமைச்சர்!!!

ஈரோடு சட்டமன்ற தொகுதியில் திமுக கூட்டணி கட்சி காங்கிரஸ் கட்சியின் வெற்றி வாய்ப்பைத் தொடர்ந்து திமுக தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார்.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் வேட்பாளராக நின்ற ஈவிகேஎஸ் இளங்கோவன் அவர்களுக்கு மிகப்பெரிய மகத்தான வரலாற்றில் பதிவாகக் கூடிய வகையில் ஒரு மாபெரும் வெற்றியை தேடி கொடுத்து இருக்க கூடிய அந்த தொகுதியின்  வாக்காள பெருமக்கள் அனைவருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் எனக் கூறியுள்ளார்.

இந்த இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது நான் கூறியதைப் போல திராவிட மாடல் ஆட்சிக்கு நீங்கள் ஆதரவு தர வேண்டும் என்கின்ற வேண்டுகோளை தொடர்ந்து விடுத்ததாகவும் ஆகவே திராவிட மாடல் ஆட்சி இன்னமும் பெருமளவில் நடைபெற வேண்டும் என்கின்ற நோக்கில் மக்கள் இந்த மகத்தான வெற்றியை அளித்துள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவராக இருக்க கூடிய எடப்பாடி பழனிச்சாமி இந்த இடைத்தேர்தலை பொறுத்தவரையில் தன்னையே மறந்து ஒரு நாலாந்தர பேச்சாளரை போல் பேசிய பேச்சுக்கு மக்கள் ஈரோடு இடைத்தேர்தல் மூலமாக ஒரு நல்ல பாடத்தை வழங்கி உள்ளார்கள் எனக் கூறியுள்ளார்.

அதேபோல் 20 மாத கால இந்த திராவிட மாடல் ஆட்சிக்கு பொதுமக்கள் அங்கீகாரம் தர வேண்டும் ஆக இந்த இடைத்தேர்தலாக மட்டும் இல்லாமல் இந்த ஆட்சியை எடை போட்டு பார்க்கக்கூடிய தேர்தலாக பார்க்க வேண்டும் என பொதுமக்களிடம் தான் தொடர்ந்து பிரச்சாரத்தை மேற்கொண்டதாகவும் இந்த நிலையில் இந்த ஆட்சிக்கு மிகவும் வலு சேர்க்கக் கூடிய வகையில் மேலும் ஒரு வெற்றியை தேடி தந்துள்ளார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

விரைவில் நாம் சந்திக்க இருக்கக்கூடிய நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிக்கு இது அச்சாரமாக இந்த இடைத்தேர்தல் அமைந்திருப்பது மிகவும் பாராட்டுக்குரியது எனவும் ஆகவே அந்த தொகுதி மக்கள் அத்தனை பேருக்கும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் திராவிட முன்னேற்ற கழகம் சார்பிலும் மனப்பூர்வமா நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் எனவும் கூறியுள்ளார்.

இந்த வெற்றிக்காக தொடர்ந்து பாடுபட்டு பணியாற்றிய நமது அமைச்சர் பெருமக்களுக்கு நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் கட்சி உறுப்பினர்கள் என அனைவருக்கும் எனது நன்றியை நான் தெரிவித்துக் கொள்கிறேன் என அனைவருக்கும் நன்றியை தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க:   எட்டு வயது சிறுமி மீதான் பாலியல் வழக்கு... தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்....!!