நெல் கிடங்கில் ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர்....!

நெல் கிடங்கில் ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர்....!

திருவாரூரில் உள்ள நெல்சேமிப்புக் கிடங்கில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.

கள ஆய்வில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் ஆய்வுகள் மேற்கொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் சென்றுள்ளார்.  திருச்சியில் இருந்து சாலை மார்க்கமாக திருவாரூருக்கு வந்த முதலமைச்சர், கலைஞர் கருணாநிதியின் பூர்வீக இல்லத்தைப் பார்வையிட்டார். அப்போது அவருக்கு காவல்துறை சார்பில் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.

அதை ஏற்றுக் கொண்ட பின் திருவாரூரின் அரசு அலுவலகங்களில் ஆய்வு மேற்கொண்டார்.  பின்னர் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் வாங்கி நெல் சேமிக்கப்படும் சேமிப்பு கிடங்கையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

முன்னதாக திருச்சியில் ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர், அங்கு அரசு அலுவலங்கள்ளைப் பார்வையிட்டு மக்களிடம் கோரிக்கை மனுக்களையும் பெற்றுக் கொண்டார்.

இதையும் படிக்க:   அண்ணாமலை சீமான் குறித்த கேள்விகளுக்கு வடிவேலு பாணியில் பதிலளித்த மஸ்தான்!!