2023 -ம் ஆண்டுக்கான நல்லாளுமை விருது அறிவிப்பு!

2023 -ம் ஆண்டுக்கான நல்லாளுமை விருது அறிவிப்பு!
Published on
Updated on
1 min read

தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளுக்கான நல்லாளுமை விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய யுக்திகள், புதிய முயற்சிகள் மூலம் பொதுமக்களுக்கு சிறந்த சேவை கிடைக்க தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றியவர்களுக்கு ஆண்டு தோறும் தமிழ்நாடு அரசு நல்லாளுமை விருது வழங்கி வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் நல்லாளுமை விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஆதரவற்ற, கைவிடப்பட்ட நோயாளிகளுக்கு பிரத்யேக பிரிவு அமைத்து சிகிச்சை அளித்த சென்னை அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் தேரணிராஜன், கடலூர் மாவட்ட ஆட்சியா் அருண் தம்புராஜ், கரூர் மாவட்ட ஆட்சியா் பிரபு சங்கர் உள்ளிட்டோருக்கு நல்லாளுமை விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அவா்களுக்கு சுதந்திர தின நிகழ்ச்சியின் போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விருதுடன், 2 லட்சம் ரூபாய் ரொக்கப்பாிசு வழங்கவுள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது. 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com