டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாகும் சூர்யா மற்றும் பாரத்.....

டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாகும் சூர்யா மற்றும் பாரத்.....

நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெற்று வரும் பார்டர்-கவாஸ்கர் டிராபியின் டெஸ்டில் ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.

இந்தியாவின் இடைநிலை ஆட்டக்காரரான சூர்யகுமார் யாதவ், விக்கெட் கீப்பர் கே.எஸ்.பாரத்துடன் இணைந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாகிறார்.

இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரிஇந்திய அணிக்கான டெஸ்ட் தொப்பியை சூர்யகுமாரிடம் வழங்கினார்.  மேலும் சேட்டேஷ்வர் புஜாரா இந்திய அணிக்கான டெஸ்ட் தொப்பியை விக்கெட் கீப்பர் பாரத்க்கு வழங்கினார். 

முதலில், பிசிசிஐ, சூர்யகுமார் மற்றும் பாரத்தின் குடும்பத்தினரை மைதானத்திற்குள் தொப்பி வழங்கும் விழாவைக் காணுமாறு அழைப்பு விடுத்தது.

தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் இரு இந்திய வீரர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும் கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார்.

-நப்பசலையார்

இதையும் படிக்க:  மீண்டும் பெண்களை உவமைபடுத்தியே பேசும் சைதை சாதிக்...