அமெரிக்காவில் தொடரும் துப்பாக்கி சூடு...!!!

அமெரிக்காவில் தொடரும் துப்பாக்கி சூடு...!!!

அமெரிக்காவின் பிலடெல்பியா நகரின் கென்சிங்டன் மற்றும் அலெகெனி பகுதிகளில் உள்ள மதுக்கடை ஒன்றில் மர்ம நபர்கள் சிலர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 12 பேர் படுகாயமடைந்தனர்.

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு தினசரி கதையாகிவிட்டது.  கடந்த மாதம் அக்டோபர் 13ம் தேதி, தென் அமெரிக்க மாநிலமான வட கரோலினாவில் துப்பாக்கி சூடு சம்பவம் நடந்தது.  தகவலின்படி, மாலை 5 மணிக்குப் பிறகு, அங்குள்ள ஒரு குடியிருப்பு பகுதியில் துப்பாக்கிச் சூடு நடந்தது.  இதில் பணியை முடித்து திரும்பிய போலீஸ்காரர் உட்பட ஐந்து பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்திற்கு அமெரிக்க அதிபர் ஜோ பிடனும் வருத்தம் தெரிவித்திருந்தார்.

தற்போது அமெரிக்காவின் ஃபிலடெல்பியா நகரின் கென்சிங்டன் மற்றும் அலெகெனி பகுதிகளில் உள்ள மதுக்கடை ஒன்றில் மர்ம நபர்கள் சிலர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 12 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்த அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எனினும், இந்த சம்பவம் குறித்த விவரங்களை அமெரிக்க காவல்துறை இதுவரை தெரிவிக்கவில்லை.

-நப்பசலையார்

இதையும் படிக்க:  ப்ளூ டிக் குறித்த பயனாளரின் கேள்விக்கு பதிலளித்த எலான் மஸ்க்..!!!