ரஷ்யா ஏவுகணை தாக்குதல்...உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு....

ரஷ்யா ஏவுகணை தாக்குதல்...உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு....

உக்ரைனில் குடியிருப்பு கட்டிடத்தின் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 35-ஆக உயா்ந்துள்ளது. 

உக்ரைன் -ரஷ்யா இடையிலான போர் பல மாதங்களாக நீடித்து வருகிறது. இந்நிலையில், கிழக்கு உக்ரைன் நகரமான டினிப்ரோவில் உள்ள குடியிருப்பு கட்டிடத்தின் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில் 9 போ் பலியான நிலையில், தற்போது பலி எண்ணிக்கை 35-ஆக உயா்ந்துள்ளது. 

மேலும் இதில் 75 பேர் காயமடைந்துள்ளனர் என்றும், மாயமான 35 பேரை தேடும் பணி நடந்து வருகிறது என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். 

-நப்பசலையார்

இதையும் படிக்க:  ரசாயன ஆலையில் ஏற்பட்ட திடீர் விபத்து...தொடரும் மீட்பு பணி....