"பாஜக அரசு கொள்ளையடிக்கும் போது பிரதமர் என்ன செய்து கொண்டிருந்தார்" பிரியங்கா கேள்வி...!

"பாஜக அரசு கொள்ளையடிக்கும் போது பிரதமர் என்ன செய்து கொண்டிருந்தார்" பிரியங்கா கேள்வி...!

கர்நாடகாவில் பாஜக அரசு கொள்ளையடிக்கும் போது பிரதமர் என்ன செய்து கொண்டிருந்தார் என பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

கர்நாடக சட்டசபைக்கான தேர்தல் இந்த மாதம் 10ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சிகள் நேரடியாக களமிறங்கியுள்ளன. இரு கட்சிகளும் மக்களிடையே வாக்கு சேகரிக்க அனல் பறக்கும் பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளன.

நேற்று கல்புர்கியில் நடந்த பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, கர்நாடகாவை மிகவும் வளர்ந்த மாநிலமாக மாற்றுவேன் என்று கனவு கண்டதாக பிரதமர் கூறுகிறார். ஆனால் கர்நாடகாவில் அரசு பணத்தை முறைகேடாக சேர்த்த பாஜக எம்.எல்.ஏ. வின் மகனின் வீட்டிலிருந்து கோடிக்கணக்கில் பறிமுதல் செய்தபோது பிரதமர் என்ன கனவு கண்டு கொண்டிருந்தாரா? என்று பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார்.

இதையும் படிக்க:பிக் பாஸில் அசிம் போலியாக வெற்றி பெற்றதாக கமிஷ்னர் அலுவலகத்தில் புகார்...!!