காலம் கடந்த நீதி மறுக்கப்பட்ட நீதி!!!!

காலம் கடந்த நீதி மறுக்கப்பட்ட நீதி!!!!
Published on
Updated on
1 min read

சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலில் 59 பேர் கொல்லப்பட்டதால் குஜராத்தில் கலவரம் வெடித்தது.  இதனால் இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டது.  இதிலிருந்து தப்பிக்க மக்கள் பல்வேறு இடங்களுக்கு தப்பித்து சென்றனர்.

பில்கிஸ் பானோ:

தப்பித்து சென்ற குடும்பங்களில் பில்கிஸ் பானோவின் குடும்பமும் ஒன்று.  தப்பி செல்லும் போது ஒரு கலவர கும்பல் அவர்களை தாக்க தொடங்கியது.  இந்த தாக்குதலில் பில்கிஸ் பானோவின் மகள் உட்பட் 7 பேர் கொல்லப்பட்டனர்.  அப்போது பானோ 5 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.  பானோ கலகக்காரர்களால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.

விசாரணை:

உச்சநீதிமன்றம் உத்தரவின் அடிப்படையில் சிபிஐ-டம் வழக்கு வழங்கப்பட்டது.  அவர்கள் விசாரணையின் முடிவில் 11 பேர் கைது செய்யப்பட்டனர்.

தண்டணை:

கைது செய்யப்ப்ட்ட குற்றவாளிகள் 11 பேருக்கும் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

விடுதலை:

சுஜல் மைத்ரா குழு பரிந்துரை அடிப்படையில் 15 ஆண்டுகளுக்கு பிறகு 11 குற்றவாளிகளும் சுதந்திர நாளில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இம்மாதிரியான கொடூரமான குற்றங்களை செய்தவர்களை விடுவிப்பதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்திய நீதி அமைப்பின் மீதான நம்பிக்கை குறையும் என மனித உரிமை ஆர்வலர்கள் கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர்.

பில்கிஸ் பானோ குடும்பம் கவலை:

குற்றவாளிகளின் விடுதலை பெருத்த ஏமாற்றமும் கவலையும் அளிப்பதாக பில்கிஸ் பானோவின் குடும்பம் தெரிவித்துள்ளது.  நீதிமன்றத்தின் மீதிருந்த நம்பிக்கை முழுவதுமாக போய்விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.  மேலும் விடுதலை குறித்து அவர்களிடம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.

உச்சநீதிமன்ற விசாரணை:

விடுதலையை தொடர்ந்து பில்கிஸ் பானோ உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.  இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.  

பில்கிஸ் பானோ வழக்கில் 11 குற்றவாளிகளின் விடுதலையை எதிர்த்து தொடரப்பட்ட மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை ஒப்புக்கொண்டது. இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்யுமாறு குஜராத் அரசுக்கு நோட்டீஸ் அனுப்பிய உச்சநீதிமன்றம், குற்றவாளிகள் 11 பேரையும் வழக்கில் இணைக்குமாறு மனுதாரர்களுக்கு உத்தரவிட்டது உச்சநீதிமன்றம். மேலும் இந்த வழக்கு இரண்டு வாரங்களுக்குப் பிறகு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனவு உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com