1- 5-ம் வகுப்பு மாணவா்களுக்கு இன்று முதல் பள்ளிகள் திறப்பு...!

காலாண்டு விடுமுறை முடிவடைந்து 1 முதல் 5-ம் வகுப்பு மாணவா்களுக்கு இன்று முதல் பள்ளிகள் திறக்கப்படவுள்ளன.

தமிழ்நாட்டில் 1 முதல் 3-ம் வகுப்பு வரையிலான பள்ளி குழந்தைகளுக்கு கடந்த 23-ம் தேதியில் இருந்தும், 4 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு கடந்த 28-ம் தேதியில் இருந்தும் விடுமுறை அறிவிக்கப்பட்டது.

இதையும் படிக்க : ஹமாஸ் பயங்கரவாத தாக்குதலில் 600 போ் உயிரிழப்பு...!

தொடர்ந்து, 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு மட்டும் விடுமுறை அக்டோபர் 9-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இதனிடையே, 6 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த 3-ம் தேதியே பள்ளிகள் திறக்கப்பட்டன.

இந்நிலையில் 1 முதல் 5-ம் வகுப்பு மாணவா்களுக்கு நீட்டிக்கப்பட்ட விடுமுறை நேற்றுடன் முடிவடைந்து, இன்று முதல் பள்ளிகள் திறக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.