”ஓபிஎஸ் அணி என்பது கட்சி அல்ல.....” முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்!!!

”ஓபிஎஸ் அணி என்பது கட்சி அல்ல.....” முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்!!!

ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அணி நிச்சயம் வெற்றி பெறும். 

பேரறிஞர் அண்ணா நினைவு நாளை முன்னிட்டு அமைதி பேரணிக்கு அனுமதி கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஈபிஎஸ் அணி தான் உண்மையான அதிமுக என்றார். 

அதே நேரத்தில் ஓபிஎஸ் அணி என்பது கட்சி அல்ல, 5 பேர் கொண்ட குழு மட்டுமே என்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அப்போது பகிரங்கமாக விமர்சித்தார்.

தொடர்ந்து பேசிய அவர் ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அணி நிச்சயம் வெற்றி பெறும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

-நப்பசலையார்

இதையும் படிக்க:    சென்னையில் கட்டிட இடிப்பால் உயிரிழந்த பெண்....பணி நிறுத்த நோட்டீஸ்!!