நவம்பர் 15....ட்ரம்ப் வெளியிட போகும் முக்கிய அறிவிப்பு!!!

நவம்பர் 15....ட்ரம்ப் வெளியிட போகும் முக்கிய அறிவிப்பு!!!

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் 15 நவம்பர் 2022 அன்று ஒரு பெரிய அறிவிப்பை வெளியிடப் போவதாக அறிவித்துள்ளார். 

அமெரிக்காவில் இன்று இடைக்கால தேர்தல் நடைபெறுகிறது.  இந்நிலையில், அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் நவம்பர் 15-ம் தேதி பெரிய அறிவிப்பை வெளியிடப் போவதாக அறிவித்துள்ளார்.   டிரம்பின் அறிவிப்பால் அரசியல் ஊகங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், பைடன் அரசாங்கமும் குழப்பத்தில் உள்ளது. 

அமெரிக்காவின் 2024 தேர்தலில் ட்ரம்ப் போட்டியிட அதிக வாய்ப்புள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.  இருப்பினும், டிரம்ப் எந்த வகையான அறிவிப்பை வெளியிடப் போகிறார் என்பதை விரிவாக விளக்கவில்லை.  மீண்டும் தேர்தல் களத்தில் இறங்கப் போகிறார் என்பது அவரது நடவடிக்கையில் தெரிகிறது.

அமெரிக்காவில் ஓஹியோவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், ”நவம்பர் 15ஆம் தேதி  ஒரு பெரிய அறிவிப்பை வெளியிட உள்ளேன்” என்று கூறினார்.  டிரம்ப் இந்த அறிவிப்பை வெளியிட்டவுடன், கூட்டத்தில் இருந்தவர்கள் உற்சாகத்துடன், டிரம்ப்-ட்ரம்ப் என்று முழக்கங்களை எழுப்பினர்.

-நப்பசலையார்

இதையும் படிக்க:     95 வயதை அடைந்த அத்வானி....வாழ்த்து தெரிவித்த தலைவர்கள்!!!