சென்னை மெட்ரோ ரயிலில் கூட்ட நெரிசலை தவிர்க்க புதிய திட்டம்...!!

சென்னை மெட்ரோ ரயிலில் கூட்ட நெரிசலை தவிர்க்க புதிய திட்டம்...!!

சென்னை மெட்ரோ ரயிலில், பெட்டிகளின் எண்ணிக்கையை 6ஆக அதிகரிக்க சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

சென்னை மெட்ரோ ரயில்  பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சராசரியாக நாள் ஒன்றுக்கு 2 முதல் 2.5 லட்சம் பயணிகள் மெட்ரோவில் பயணிக்கும் நிலையில், தினமும் உச்ச நேரங்களிலும் விடுமுறை நாட்களிலும் மெட்ரோவில் கூட்டம் அதிகரித்து  வருகிறது.

இந்நிலையில் பயணிகளின் வசதிக்காக சென்னை மெட்ரோ ரயில் கட்டம்-1ன் படி இயக்கப்படும் ரயில்களில், குளிர்சாதன பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே   சென்னை மெட்ரோ ரயிலில் மூன்று பொது பெட்டிகளும், ஒரு மகளிர் பெட்டியும் இருக்கும் நிலையில் அதோடு இரண்டு பெட்டிகளை இணைத்து ஆறு பெட்டிகளாக இயக்க சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இதையும் படிக்க:    ”மூன்றே மாதத்தில் கருணாநிதிக்கு பாடம் புகட்டியது போல....” பிரசாரத்தில் ஈபிஎஸ்!!