காதலித்து ஏமாற்றிய காதலன்.... புகாரளித்த காதலி...!!

காதலித்து ஏமாற்றிய காதலன்.... புகாரளித்த காதலி...!!

காதலித்து திருமணம் செய்து கொள்வதாக ரூ.68 லட்சம் பெற்று கொண்டு வேறொரு பெண்ணுடன் திருமணம் செய்ய உள்ள காதலன் மீது நடவடிக்கை எடுக்க காவல் நிலையத்தில் காதலி புகாரளித்துள்ளார்.

சென்னையை சேர்ந்த 27 வயதுடைய பெண் ஒருவர் மதுரவாயல் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தனது வக்கீல்களுடன் சென்று புகார் ஒன்றை அளித்துள்ளார்.  அந்த புகாரில் தான் சிறுவயதில் பத்தாம் வகுப்பு படிக்கும் போது தன்னுடன் படித்த நிஷாந்த் என்பவருடன் பழக்கம் ஏற்பட்ட நிலையில் அவர் தன்னை காதலிப்பதாக கூறியதாகவும் இருவரும் படிக்கும்போது காதலித்து வந்த நிலையில் கல்லூரியில் படிக்கும் போதும் காதல் தொடர்ந்த நிலையில் தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி பலமுறை தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாகவும் கூறியுள்ளார்.

மேலும் தனது பூர்வீக சொத்தை விற்று வந்த பணத்தில் நிஷாந்த் சிறுக, சிறுக ரூ.68 லட்சம் பணத்தை பெற்று கொண்டதாகவும் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு தான் பலமுறை கூறியும் நிஷாந்த் தன்னை திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றி வந்ததாகவும் தெரிவித்த அவர் பின்னர் விசாரித்தபோது அவர் பணத்தை பெற்றுக்கொண்டு தன்னை ஏமாற்றியதாகவும் தெரிவித்துள்ளார்

தொடர்ந்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் முக்கிய பொறுப்பில் உள்ள நபரின் மகளை  திருமணம் செய்து கொள்ள போவதாகவும் தெரியவந்த நிலையில் தன்னை காதலித்து இருந்து தன்னிடமிருந்து ரூ.68 லட்சம் பணத்தை பெற்று கொண்டு ஏமாற்றிய நிஷாந்த் மற்றும் அவரது பெற்றோர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென புகார் அளித்துள்ளார்.  

இந்த புகாரின் அடிப்படையில் மதுரவாயல் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.  தனது காதலனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நடைபெற உள்ள நிலையில் தனது காதலன் திருமணத்தை நிறுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என காதலி அளித்த புகாரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதையும் படிக்க:   பாதாள சாக்கடையால் அவதியுறும் பொதுமக்கள்... நடவடிக்கை எடுக்குமா மாநகராட்சி!!