மதுரையில் உச்சத்தை தொட்டது ஒரு கிலோ தக்காளி...!அதிர்ச்சியில் பொதுமக்கள்

மதுரையில் உச்சத்தை தொட்டது ஒரு கிலோ தக்காளி...!அதிர்ச்சியில் பொதுமக்கள்
Published on
Updated on
1 min read

தமிழ்நாட்டில் தக்காளியின் விலை தொடர்ச்சியாக அதிகரித்து காணப்படும் நிலையில், மதுரையில் தக்காளியின் விலை 150 முதல் 200 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

அண்டை மாநிலங்களில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக, தக்காளியின் வரத்து குறைந்து காணப்படுகிறது. இதனால் தமிழ்நாட்டில் அனைத்து இடங்களிலும் தக்காளி உச்சத்தை தொட்டே காணப்படுகிறது. 

இந்நிலையில் மதுரையில் தக்காளி கிலோ ஒன்றுக்கு 150 முதல் 200 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்துள்ள பொதுமக்கள், விலையேற்றத்தை அரசு கட்டுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை தெரிவித்தனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com