ஈச்சர் வாகனத்தில் கொண்டு வரப்பட்ட குட்கா... டிரைவர் தலைமறைவு!!!

ஈச்சர் வாகனத்தில் கொண்டு வரப்பட்ட குட்கா... டிரைவர் தலைமறைவு!!!

சூளகிரி அருகே ஈச்சர் வாகனத்தில் ரூபாய் 15 இலட்சம் மதிப்பிலான குட்கா பொருட்களை கடத்தி வந்த வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

இரவு ரோந்து பணி:

சின்னார் அருகே போலீசார் இரவு ரோந்தின் போது வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.  போலீசாரின் வாகன தணிக்கையின் போது தாறுமாறாக ஓட்டிவந்த ஈச்சர் வாகனத்தை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.

தடைசெய்யப்பட்ட..:

அப்போது தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்காவை கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து சென்னையை நோக்கி ஈச்சர் வாகனத்தில் குட்காவை கடத்தி வந்த சென்னப்பள்ளியை சேர்ந்த கிளினர் சதீஷ் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தலைமறைவு:

ஈச்சர் வாகனத்துடன் சேர்ந்து ரூபாய் 15 இலட்சம் மதிப்பிலான குட்கா கடத்திய வழக்கில் தலைமறைவான ஈச்சர் வாகன ஓட்டுநனரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதையும் படிக்க:  கீழ்பென்னாத்தூர் அம்மன் 70- ஆம் ஆண்டு தேர் திருவிழா...!