
சூளகிரி அருகே ஈச்சர் வாகனத்தில் ரூபாய் 15 இலட்சம் மதிப்பிலான குட்கா பொருட்களை கடத்தி வந்த வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
இரவு ரோந்து பணி:
சின்னார் அருகே போலீசார் இரவு ரோந்தின் போது வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். போலீசாரின் வாகன தணிக்கையின் போது தாறுமாறாக ஓட்டிவந்த ஈச்சர் வாகனத்தை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.
தடைசெய்யப்பட்ட..:
அப்போது தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்காவை கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து சென்னையை நோக்கி ஈச்சர் வாகனத்தில் குட்காவை கடத்தி வந்த சென்னப்பள்ளியை சேர்ந்த கிளினர் சதீஷ் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தலைமறைவு:
ஈச்சர் வாகனத்துடன் சேர்ந்து ரூபாய் 15 இலட்சம் மதிப்பிலான குட்கா கடத்திய வழக்கில் தலைமறைவான ஈச்சர் வாகன ஓட்டுநனரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதையும் படிக்க: கீழ்பென்னாத்தூர் அம்மன் 70- ஆம் ஆண்டு தேர் திருவிழா...!