ஆளுநரின் நடவடிக்கைகள் ஆர் எஸ் எஸ் முகத்தை காட்டுகிறது தொல். திருமாவளவன் காட்டம்

ஆளுநரின் நடவடிக்கைகள் ஆர் எஸ் எஸ் முகத்தை காட்டுகிறது  தொல். திருமாவளவன் காட்டம்
Published on
Updated on
1 min read

ஆளுநரின் செயல் 

 தமிழக அரசு சார்பில் அனுப்பபட்டுள்ள மசோதாக்கள் நடவடிக்கைகள் எதுவும் எடுக்காத நிலையில் இன்றைக்கு ஜன -9 முதல் சட்டசபை கூட்டம் தொடங்கியது. இதில் ஆளுநர் உரையுடன் தொடங்கிய இந்த கூட்டமானது. தமிழக அரசு சார்பில் கொடுக்கபட்டதை ஆளுநர் முழுமையாக வாசிக்கவுமில்லை, அதில் கொடுக்கப்பட்ட திராவிடமாடல் என்பதை தவிர்ந்தும் உரை நிகழ்த்தினார் ஆளுநர் ஆர்.என்.ரவி 

திருமாவளவன் ட்விட்டர் பதிவு 

ஆளுநரின் நடவடிக்கைகள், அவரின் ஆர்எஸ்எஸ்
முகத்தை மீண்டும் அம்பலப்படுத்தியுள்ளது. தேசியகீதம் இசைப்பதற்குள் ஆளுநர் பேரவையிலிருந்து வெளியேறியது அவை மீறல் மட்டுமின்றி, தேசியகீத அவமதிப்புமாகும்.
அவர் இனியும் அப்பதவியில் நீடிக்கத் தகுதியில்லை.
எனவே அவர் பதவி விலக வலியுறுத்த

சனவரி-13 முற்றுகை போராட்டம் 

சனவரி-13 அன்று விசிக சார்பில் ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும்.
ஆளுநரின் போக்குகள் ஏற்கனவே திட்டமிட்ட ஒன்றுதான். இந்திய அரசுக்கும் மாநில அரசுக்குமிடையில் முரண்பாடுகளை உருவாக்கி அரசியல் குழப்பத்தை ஏற்படுத்துவதே அவர்களின் நோக்கம்.


இதனை வன்மையாகக் கண்டிக்கிறோம் எனவும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் பதிவிட்டுள்ளார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com