பொறியியல் கலந்தாய்வு தேதியை அறிவித்தார் அமைச்சர் பொன்முடி...!

பொறியியல் கலந்தாய்வு தேதியை அறிவித்தார் அமைச்சர் பொன்முடி...!

இந்த ஆண்டு பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு ஜூலை 2-ம் தேதி தொடங்கும் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். 

சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஜூலை 2-ம் தேதி தொடங்கும் எனவும், பொதுப்பிரிவுக்கான கலந்தாய்வு ஜூலை 7-ம் தேதி நடைபெறும் என்றும் கூறினார்.

இதையும் படிக்க : வெப்ப சலனம் காரணமாக அடுத்த 4 நாட்களுக்கு... இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு...!

மேலும்,  அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நுழைவுக்கட்டணமாக ஆண்டுக்கு 200 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், கலைக் கல்லூரிகளில் விண்ணப்பிக்க கால அவகாசம் 3 நாட்கள் வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும், சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளிலும் விண்ணப்பிக்கலாம் என்றும் கூறினார்.