”போதைப்பொருள் சோதனை செய்ய KTRக்கு தைரியம் இருக்கிறதா?” சவால் விட்ட பாஜக மாநில தலைவர்!!!
நான் புகையிலை சாப்பிடுவதில்லை என்பதை நிரூபிக்க ரத்த பரிசோதனை செய்து கொள்ள தயாராக உள்ளேன். தான் சாப்பிடவில்லை என்பதை நிரூபிக்க ரத்தம் மற்றும் முடி பரிசோதனை மாதிரிகளை கொடுக்க KTR க்கு தைரியம் இருக்கிறதா?
பழி ஆட்டம்:
தெலுங்கானாவில் ஆளும் டிஆர்எஸ் மற்றும் எதிர்க்கட்சியான பாஜக இடையே புதிய பழி ஆட்டம் தொடங்கியுள்ளது. தெலுங்கானா மாநில பாஜக தலைவர் பூண்டி சஞ்சய் மீதான தெலுங்கானா நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் கே.டி.ராமராவின் குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
சவால் விட்ட பாஜக:
”நான் புகையிலை சாப்பிடுகிறேன் என்ற கே.டி.ஆரின் குற்றச்சாட்டு தவறானது. மாறாக கே.டி.ஆர் போதைப்பொருளுக்கு அடிமையானவர். நான் புகையிலையை உட்கொள்வதில்லை என்பதை நிரூபிப்பதற்காக இரத்த பரிசோதனைக்கு நான் தயாராக உள்ளேன். தான் போதை மருந்து சாப்பிடவில்லை என்பதை நிரூபிக்க ரத்தம் மற்றும் முடி பரிசோதனை மாதிரிகளை கொடுக்க KTR க்கு தைரியம் இருக்கிறதா?” எனக் கேட்டுள்ளார் தெலுங்கானா மாநில பாஜக தலைவர்.
KTR தெலுங்கானா முதல்வர் கே. இவர் சந்திரசேகர் ராவின் மகன் ஆவார்.
-நப்பசலையார்
இதையும் படிக்க: ”டெல்லியின் ஆதரவு இல்லாமல்.....” சஞ்சய் ராவத்!!