கேந்திரிய வித்தியாலயா பள்ளியில் தமிழ் எழுத்துக்கள் அழிப்பு!

கேந்திரிய வித்தியாலயா பள்ளியில் தமிழ் எழுத்துக்கள் அழிப்பு!

திருவாரூரில் உள்ள கேந்திரிய வித்தியாலயா பள்ளியில் தமிழ் மொழியில் எழுதப்பட்ட வகுப்பறையின் பெயர் அழிக்கப்பட்டு இந்தி மற்றும் ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளது.

திருவாரூரில் அமைந்துள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தோடு இணைந்து கேந்திரிய வித்யாலயா பள்ளி செயல்பட்டு வருகிறது.  இந்த பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை சுமார்  900-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகிறார்கள்.

இந்தப் பள்ளியில் அமைந்துள்ள வகுப்பறையின் முகப்பில் தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் வகுப்பறையின் பெயர் எழுதப்பட்டிருந்தது. இந்நிலையில் இதில் தமிழில் எழுதப்பட்டது மட்டும் தற்போது அழிக்கப்பட்டு அதன் மீது ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய இரண்டு மொழிகளில் மட்டும் எழுதப்பட்டுள்ளது.