திமுக உயர்நிலை செயல் திட்டக்குழு கூட்டம்...நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள்...!

திமுக உயர்நிலை செயல் திட்டக்குழு கூட்டம்...நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள்...!

திமுக உயர்நிலை செயல் திட்டக்குழு கூட்டத்தில் ஜூன் 20-ம் தேதி கருணாநிதி கோட்டம் திறப்பு உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

  

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக உயர்நிலை செயல் திட்டக்குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, துணை பொதுச்செயலாளர்கள், செயல் திட்டக்குழு உறுப்பினர்கள்  உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  

இதையும் படிக்க : பிரான்சில் கேன்ஸ் திரைப்பட விழா 2023...ரசிகர்களை கவரும் உடையில் வந்த மனுஷி சில்லர்!

தொடர்ந்து, ஜூன் 3-ம் தேதி  மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் தலைவர்கள் பங்கேற்கும் கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தை, வடசென்னையில் நடத்த ஏற்பாடு செய்யுமாறு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. 

இதையடுத்து ஜூன் 20-ஆம் நாள் திருவாரூரில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் கோட்டத்தினை பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் திறந்து வைக்கிறார். பின்னர் ஜூன் 3ம் தேதி தொடங்கி, 2024 ஜூன் 3ம் தேதி வரை ஓராண்டு காலத்திற்குத் தொடர்ச்சியான நிகழ்ச்சிகளைத் திட்டமிட்டு நடத்திட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.