ஊடகங்களுக்கிடையேயான கிரிக்கெட் போட்டி...களமிறங்கும் மாலைமுரசு!

ஊடகங்களுக்கிடையேயான கிரிக்கெட் போட்டி...களமிறங்கும் மாலைமுரசு!

தமிழ் ஊடகங்களுக்கிடையேயான கிரிக்கெட் போட்டி மிகுந்த எதிர்ப்பார்ப்புகளுடன் நாளை தொடங்கவுள்ளது.

கடந்த சில வருடங்களாக தமிழ் ஊடகங்களுக்கிடையே கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில் சன் டிவி, கலைஞர் டிவி, புதிய தலைமுறை உள்ளிட்ட பிரபல ஊடகங்கள் கலந்துகொண்டு ஆட்டத்தை சிறப்பித்து வந்தது. 

அந்த வகையில், கடந்தாண்டு நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் மாலைமுரசு அணி பங்கேற்று ஆட்டத்தின் தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இறுதியில் சன் டிவி அணியுடன் பலப்பரீட்சை நடத்தியது. அதிலும் தங்களுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மாலை முரசு அணி 2 ஆம் இடத்தை பிடித்தது.

இதையும் படிக்க : வெளியானது 11 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்...முதலிடம் பிடித்த மாவட்டம் எது...?

இந்நிலையில் தமிழ் ஊடகங்களுக்கிடையே நடைபெறும் இந்தாண்டுக்கான கிரிக்கெட் போட்டி, பிரபல கல்லூரியான லயோலா கல்லூரி மைதானத்தில் நாளை தொடங்குகிறது. இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வருகை தரும் மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் முதல் போட்டியை தொடங்கி வைக்கவுள்ளார். மொத்தம் 3 நாட்கள் அதாவது வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறும் இந்த போட்டியில் மாலை முரசு அணியும் களமிறங்குகிறது. கடந்தாண்டு 2 ஆம் இடத்தை பிடித்த மாலை முரசு அணி இம்முறை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும் முயற்சியில் களமிறங்குகிறது.