பாஜகவின் இரும்பு கோட்டையில் காங்கிரஸின் அசைக்க முடியாத கோட்டை!!!

பாஜகவின் இரும்பு கோட்டையில் காங்கிரஸின் அசைக்க முடியாத கோட்டை!!!

குஜராத்தின் ஆட்சியில் 24 ஆண்டுகளாக பாஜகவுக்கு எதிராக தண்டா தொகுதி ஒரு அசைக்க முடியாத கோட்டையாக மாறியுள்ளது. 

கடந்த 20 ஆண்டுகளாக:

பனஸ்கந்தா மாவட்டத்தில் உள்ள தண்டா தொகுதி கடந்த இருபதாண்டுகளாக காங்கிரஸின் கோட்டையாக இருந்து வருகிறது.  இந்த தொகுதியில் காங்கிரஸ் தொடர்ந்து 5 முறை வெற்றி பெற்று வருகிறது.  இந்த தொகுதியில் பாஜக இரண்டு முறை மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.  

1990 மற்றும் 1995 ஆம் ஆண்டுகளில் தொடர்ந்து இரண்டு முறை பாஜகவின் காந்திபாய் கச்சோரியா இங்கு தாமரைக்கு ஆதரவாக வெற்றி பெற்றுள்ளார்.  24 ஆண்டுகளாக மாநிலத்தில் ஆட்சியில் இருக்கும் பாஜகவுக்கு தண்டா ஒரு அசைக்க முடியாத கோட்டையாக மாறியுள்ளது. 

காங்கிரஸின் வெற்றிகள்:

2017ல் நடந்த சட்டசபை தேர்தலிலும், காங்கிரஸ் இத்தொகுதியில் வெற்றி பெற்றது.  2017ம் ஆண்டு வெற்றியானது காங்கிரஸின் தொடர்ச்சியான ஐந்தாவது வெற்றியாகும்.  காங்கிரஸின் காந்திபாய் கலாபாய் 24,000 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜகவின் மல்ஜிபாயை தோற்கடித்தார்.  இத்தேர்தலில் மொத்தம் 9 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர், அவர்களில் 7 வேட்பாளர்களின் டெபாசிட் பறிமுதல் செய்யப்பட்டது. 

2012 தேர்தலிலும் காங்கிரஸின் காந்திபாய் கலாபாய்  26,000 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் காமபாய் பிகாபாயை தோற்கடித்தார். காந்திபாய்க்கு முன்னர், காங்கிரஸின் முகேஷ் குமார் காத்வி 1998, 2002 மற்றும் 2007ல் தொடர்ந்து மூன்று முறை இங்கிருந்து வெற்றி பெற்றுள்ளார்.   

காந்திபாய்க்கு ஹாட்ரிக் வெற்றி கிடைக்குமா அல்லது போக்கு மாறுமா?:

காந்திபாய் கலாபாய்க்கு காங்கிரஸ் மீண்டும் வாய்ப்பளித்துள்ளது.  அதேசமயம், இந்த தொகுதியில் லதுபாய் சந்த்பாய் பார்கியை பாஜக நிறுத்தியுள்ளது.  ஆம் ஆத்மி கட்சியின் மகேந்திரபாய் கேசர்பாய் பும்பாடியா போட்டியை மும்முனையாக மாற்ற முயற்சித்து வருகிறார்.  இந்த தொகுதிக்கு டிசம்பர் 5-ம் தேதி இரண்டாம் கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.  முடிவுகள் வந்த பின்னரே இந்த தொகுதி காங்கிரஸின் கோட்டையா என்பது தெளிவாகும்.

-நப்பசலையார்

இதையும் படிக்க:    "உங்களுக்கு ராவணனைப் போல 100 தலைகள் இருக்கிறதா?" மோடி அளித்த அல்ட்டிமேட் பதில்!!!