சென்னை மெட்ரோ ரயில் கட்டம் 2-ல்...2 நிமிட இடைவேளையில் ஒரு ரயில் இயக்கம்...மெட்ரோ நிர்வாகம் முடிவு!

சென்னை மெட்ரோ ரயில் கட்டம் 2-ல்...2 நிமிட இடைவேளையில் ஒரு ரயில் இயக்கம்...மெட்ரோ நிர்வாகம் முடிவு!

சென்னை மெட்ரோ ரயில் கட்டம் 2-ல், 2 நிமிட இடைவேளையில் ஒரு மெட்ரோ ரயில் இயக்கப்படும் என்றும், 138 ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் இயக்கப்பட உள்ளதாக சென்னை மெட்ரோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னை மெட்ரோ ரயில் கட்டம் 2-ல் 118.9 கிலோமீட்டர் நீளத்திற்கு நகரில் 128 ரயில் நிலையங்களை இணைக்கும் வகையில் உருவாக்கப்பட்டு வருகிறது. சென்னை மெட்ரோ ரயில் கட்டம் 2ல் ஓட்டுனர் இல்லாத ரயில்களும், அதிவேக சேவைகளும் கிடைக்கும் வகையில் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் திட்டத்தை வடிவமைத்துள்ளது.

இந்நிலையில் சென்னை மெட்ரோ ரயிலை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், சென்னை மெட்ரோ ரயில் கட்டம் 2ல், 2 நிமிட இடைவேளையில் ஒரு ரயில் சேவை வழங்க திட்டமிடப்பட்டு வடிவமைக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.  கட்டம் 2ல் (Phase 2) தொடங்கப்பட்டபோது 4 முதல் 10 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட திட்டமிடப்பட்டது. ஆனால், தற்போது சென்னை மெட்ரோ ரயில் பயன்படுத்துவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், ரயில் சேவைகளை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதையும் படிக்க : அமமுக நிர்வாகியை தாக்கிய அதிமுக தரப்பினர்...ஈபிஎஸ் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு!

குறிப்பாக 138 ஓட்டுநர் இல்லாத ரயில்கள் இயக்கப்படும் என கூறப்படுகிறது. தற்போது சென்னை மெட்ரோ ரயில் கட்டம் 1ல் விம்கோ நகர் முதல் சென்ட்ரல் வரை 10 நிமிடத்திற்கு ஒரு ரயில் சேவை உச்ச நேரங்களில் இயக்கப்படுகிறது. சென்னை மெட்ரோ ரயில் கட்டம் 1ல் 2.5 நிமிடங்களுக்கு ஒரு ரயில் சேவை வழங்கப்படும் வகையில் வடிவமைக்கப்பட்டாலும், போதிய மெட்ரோ ரயில்கள் இல்லாததால் பத்து நிமிடத்திற்கு ஒரு சேவை வழங்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

நாள்தோறும் சராசரியாக சென்னை மெட்ரோ ரயில் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 2.5 லட்சம் என அதிகரித்து வரும் நிலையில், சென்னை மெட்ரோ ரயிலில் ரயில் பெட்டிகளை அதிகரிக்க மெட்ரோ ரயில் நிர்வாகம் ஏற்கனவே திட்டமிட்டுள்ள நிலையில், கட்டம் இரண்டில் ரயில் சேவைகள் அதிகரிக்கவும், அதை கட்டம் ஒன்றில் படிப்படியாக செயல்படுத்தவும் திட்டமிடப்பட்டு வருவதாக சென்னை மெட்ரோ நிறுவன  அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர்.