சைத்ர நவராத்திரி 7-ம் நாள் சிறப்பு வழிபாடு

சைத்ர நவராத்திரி 7-ம் நாள் சிறப்பு வழிபாடு

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் சைத்ர நவராத்தியின் 7-ம் நாள் நிகழ்ச்சியில் பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். பங்குனி மாத அமாவாசை பிறகு வரும் ஒன்பது நாட்கள் சைத்ர நவராத்திரி என்று கொண்டாட்டப்படு வருகிறது.

குறிப்பாக வட மாநிலங்களில் அதிகம் கொண்டாடப்படும் சைத்ர நவராத்திரி கடந்த 22-ம் தேதி தொடங்கியது. அதைத் தொடர்ந்து அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சைத்ர நவராத்திரியின் 7-ம் நாளான இன்று மும்பை தேவி கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. அதன் ஆர்த்தி உற்சவத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.