பிறந்த 30 நாட்களேயான நிலையில்..... விற்கப்பட்ட பெண் குழந்தை.... 

பிறந்த 30 நாட்களேயான நிலையில்..... விற்கப்பட்ட பெண் குழந்தை.... 

சிவகாசி அருகே மாரனேரி கிராமம் ஈஸ்வரன் காலனியை சேர்ந்த பட்டாசு தொழிலாளிகளான பாண்டீஸ்வரன்- பஞ்சவர்ணம் தம்பதியினர்.  இவர்களுக்கு ஏற்கனவே 2மகன்கள், ஒருமகள் இருந்த நிலையில் 4வது பெண் குழந்தை பிறந்துள்ளது.  தங்களது 4 வதுபெண் குழந்தையை பிறந்து 30  நாட்களில் நாகர்கோவிலைச் சேர்ந்த குழந்தை இல்லாத ஜார்ஜ் -அயரின் தம்பதியினருக்கு ரூபாய் 40 ஆயிரத்துக்கு விற்றுள்ளனர். 

மீட்கப்பட்ட குழந்தை:

பஞ்சவர்ணத்தின் தாயார் மாரியம்மாள் தந்த தகவலின் அடிப்படையில் விருதுநகர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு துறை சமூக பணியாளர் ஜானகி மாரனேரி காவல்நிலையத்தில் புகார்கொடுத்து போலீசாருடன்   ஒருங்கிணைந்து  குழந்தையை மீட்டு மதுரை தனியார் மருத்துவமனை குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் ஒப்படைத்தனர். 

குற்றவாளிகள் கைது:

சம்பவம் குறித்து மாரனேரி போலீசார் வழக்குபதிவுசெய்து, விசாரணை மேற்கொண்டு, குழந்தையை விற்பனை செய்த பெற்றோர்களான,  பாண்டீஸ்வரன்- பஞ்சவர்ணம்  தம்பதியினரையும், உடந்தையாக இருந்த வெம்பகோட்டை கிராமத்தைச் சேர்ந்த கிராமப்புற செவிலியர் முத்துமாரி, மாரனேரி அரசு ஆரம்பசுகாதார நிலையசெவிலியர் அஜிதா, குழந்தையை  விலைக்கு வாங்கிய அயரின் ஆகிய 5 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர். 

தேடிவரும் போலீசார்:

தலைமறைவாக உள்ளஅயரின் கணவரான நாகர்கோவில் மத்திய கூட்டுறவு வங்கி  மேற்பார்வையாளராக பணிபுரியும் ஜார்ஜ் என்பவரை போலீசார் வலை வீசி தேடிவருகின்றனர். கிராமப்புறத்தில் பட்டாசு தொழிலாளி தம்பதியினர் தங்களது பெண்குழந்தையை விலைக்குவிற்ற கொடுமையான சம்பவம் சிவகாசி வட்டாரமக்களிடையே  பெரும்பரபரப்பையும், அதிர்ச்சியையும்  ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க:  ஆந்திராவிலிருந்து சென்னைக்கு கடத்தல்.... கைது செய்யப்பட்ட பெண்கள்!!!