சிங்கப்பூர் - மதுரை இடையே கூடுதல் விமானம் வேண்டும்...மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்!

சிங்கப்பூர் - மதுரை இடையே கூடுதல் விமானம் வேண்டும்...மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்!
Published on
Updated on
1 min read

சிங்கப்பூர் - மதுரை இடையே விமான சேவையை அதிகரிக்க கோரி மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்குச் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 9 நாட்கள் பயணத்தை முடித்துக் கொண்டு தமிழ்நாடு புறப்பட்டார்.

இந்நிலையில் மத்திய போக்குவரத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதன்படி, சிங்கப்பூரில் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த 4 லட்சம் பேர் இருப்பதாகவும், சிங்கப்பூருக்கும் மதுரைக்கும் இடையே வாரத்திற்கு 3 முறை மட்டுமே விமான சேவை உள்ளதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளார். 

விமான இயக்கம் தொடர்பான குறைபாடுகளை சிங்கப்பூர் அரசின் உள்துறை அமைச்சர் தன்னை சந்தித்தபோது எழுப்பியதாக குறிப்பிட்ட அவர், சிங்கப்பூருக்கும் மதுரைக்கும் இடையே அதிக விமானங்களை இயக்க அனுமதிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com