அம்பேத்கரே இந்தியாவின் முதல் ஆண் பெண்ணியவாதி - சசி தரூர் புகழாரம்

அம்பேத்கரே இந்தியாவின் முதல் ஆண் பெண்ணியவாதி - சசி தரூர் புகழாரம்

அம்பேத்கருக்கு சசி தரூர் புகழாரம்

கோவா மாநிலம் பனாஜியில் பாரம்பரிய திருவிழா நடைபெறுகிறது. அதில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு பேசிய காங்கிரஸ் மூத்த தலைவரும் எழுத்தாளருமான சசி தரூர் அம்பேத்கருக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.

இந்தியாவின் முதல் ஆண் பெண்ணியவாதி

டாக்டர் பி. ஆர். அம்பேத்கரே இந்தியாவின் முதல் ஆண் பெண்ணியவாதி ஆவார். அவர் பல தசாப்தங்களுக்கு முன்னரே முற்போக்கு கருத்துக்களை பரப்பி உள்ளார். அது எந்த அளவுக்கு என்றால், இந்த தலைமுறை அரசியல்வாதிகளுக்கு கூட அது முற்போக்கானதாக இருக்கிறது என்றார்.

மேலும் படிக்க: தமிழ் திரைத்துறை இருக்கும் வரை அவர் புகழ் நீடித்திருக்கும் - ஆரூர்தாஸிற்கு நாசர் இரங்கல்! 

திருமணம், குழந்தை பேறு, பெண்களின் உரிமை

1920,30,40-களில் பெண்களும் பங்கேற்ற கூட்டங்களில் டாக்டர் பி. ஆர். அம்பேத்கர் பேசி உள்ளார். கட்டாய திருமணத்துக்கு சம்மதிக்கக் கூடாது என பெண்களை அம்பேத்கர் வலியுறுத்தினார். திருமணத்தையும் குழந்தை பெற்றுக்கொள்வதையும் தள்ளிப்போட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். 90 ஆண்டுகளுக்கு முன்பே பெண்களின் உரிமைக்காக குரல் கொடுத்தவர்அம்பேத்கர்.

முதன்மையான தலித் தலைவராக

அம்பேத்கரை தலித் தலைவராக பார்க்கும் மனோபாவம் உள்ளது. நாட்டின் முதன்மையான தலித் தலைவராக அவர் விளங்கினார். தனது 20வது வயதிலேயே செல்வாக்கு மிக்கவராக விளங்கினார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

- அறிவுமதி அன்பரசன்