முன்னுரிமை அடிப்படையில் உயர்மட்ட பாலம் - அமைச்சர் எ.வ.வேலு!

முன்னுரிமை அடிப்படையில் உயர்மட்ட பாலம் - அமைச்சர் எ.வ.வேலு!
Published on
Updated on
1 min read

திருப்பூர் அனுப்பர் பாளையத்தில் உள்ள தரைப் பாலம், முன்னுரிமை அடிப்படையில் உயர்மட்ட பாலமாக மாற்றப்படும் என அமைச்சர் எ.வ. வேலு தெரிவித்தார். 


தமிழ்நாடு சட்டப்பேரவையில், திருப்பூர் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் விஜயகுமார், அனுப்பர் பாளையத்தில் இருந்து மின் மயானத்திற்கு  செல்லும் தரைப்பாலம் உயர் மட்ட பாலமாக மாற்றப்படுமா என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, இப்பகுதியில் இதுவரை எந்த வெள்ள பாதிப்பும் வரவில்லை என்றும், இருந்தாலும் முன்னுரிமை அடிப்படையில் உயர் மட்ட பாலம் அமைக்கப்படும் என்றும் கூறினார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com