கரும்பு விவசாயிகளுக்கு 450 கோடி ரூபாய் நிலுவை தொகை வழங்கப்படுமா?!!!

கரும்பு விவசாயிகளுக்கு 450 கோடி ரூபாய் நிலுவை தொகை வழங்கப்படுமா?!!!

கரும்பு விவசாயிகளுக்கு  நிலுவைத் தொகைகள் வழங்கப்பட்டு வருவதாக கால்ஸ் டிஸ்லரீஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

கரும்பு விவசாயிகளுக்கு 400 கோடி ரூபாய் நிலுவைத் தொகை வைத்துள்ள தஞ்சாவூர் மாவட்டம் திருமண்டங்குடி ஆரூரான் சர்க்கரை ஆலையை காலஸ் டிஸ்டிலரீஸ் நிறுவனம் வாங்கியுள்ள நிலையில், நிலுவைத் தொகையை வழங்க வலியுறுத்தி, 59 ஆவது நாளாக கரும்பு விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அந்நிறுவனத்தின் நிர்வாக ஆலோசகர் முனுசாமி, விவசாயிகளின் கடன் பிரச்சினை குறித்து வங்கி அதிகாரிகளுடன் மாவட்ட ஆட்சியர் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளதாகவும் இந்த ஆண்டு 10 ஆயிரம் ஏக்கரில் கரும்பு பயிரிட திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறினார். 

-நப்பசலையார்

இதையும் படிக்க:  ஒட்டியம்பாக்கத்தில் நடந்த பாலாபிஷேக விழா.....