சொந்த ஊர் செல்லும் மக்களுக்கு ஒரு அறிவுப்பு...! சென்னையில் இன்று முதல் கூடுதல் இணைப்பு பேருந்துகள் இயக்கம்...!

சொந்த ஊர் செல்லும் மக்களுக்கு ஒரு அறிவுப்பு...! சென்னையில் இன்று முதல் கூடுதல் இணைப்பு பேருந்துகள் இயக்கம்...!

பொங்கல் பண்டிகையை ஒட்டி சென்னை முழுவதும் இன்று 340 சிறப்பு இணைப்பு பேருந்துகள் இயக்கப்படும் என மாநகர போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

பொங்கல் சிறப்பு பேருந்துகள் :

பண்டிகை காலங்களை முன்னிட்டு தமிழக அரசு சிறப்பு பேருந்துகளை இயக்கி வருகிறது. அந்த வகையில் வருகிற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மக்கள் சிரமப்படாமல் சொந்த ஊர்களுக்கு செல்லும் படியாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து கழகம் அறிவித்திருந்தது.

இதையும் படிக்க : புத்தக கண்காட்சியில் அரங்கு எண் 272-ல் இடம்பெற்ற சிறப்பு புத்தகங்கள் என்னென்ன...?

அதன்படி, சென்னையிலிருந்து தினமும் இயக்கப்படும் 2 ஆயிரத்து 100 பேருந்துகளுடன், சென்னையில் இருந்து 3 நாட்களுக்கு கூடுதலாக 4 ஆயிரத்து 449 சிறப்பு பேருந்துகளும், மற்ற முக்கிய நகரங்களில் இருந்து 6 ஆயிரத்து 183 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.

இந்நிலையில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு சென்னையில் இன்று  முதல் 340 கூடுதல் இணைப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று சென்னை மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.