படகுகளுக்கு ரூ.20 லட்சம் நிவாரணம்...குடும்பங்களுக்கு 10ஆயிரம்...அமைச்சர் வலியுறுத்தல்!

உதயநிதி ஸ்டாலின் அமைச்சராவது நாட்டிற்கு தேவையில்லாதது என்றும் தமிழ்நாடு முதலமைச்சர் பொம்மையாக இருந்து வருவதாகவும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார்.
மாண்டஸ் புயல்:
வங்கக்கடலில் நிலைக்கொண்டிருந்த தீவிர புயலான மாண்டஸ் வலுவிழந்து நேற்று நள்ளிரவு 3 மணி அளவில் கரையைக் கடந்தது. புயல் கரையை கடந்த போது 75 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியதால் ஆங்காங்கே சேதம் என்பது அதிகமாகவே காணப்பட்டது.
ஆய்வு மேற்கொண்ட ஜெயக்குமார்:
இந்நிலையில், சென்னை காசிமேடு துறைமுகம் பகுதியில் மாண்டஸ் புயலால் சேதமடைந்த படகுகளைப் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பொம்மையாக செயல்படும் முதலமைச்சர்:
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், திமுக அரசால் மக்களுக்கு வேதனை தான் என்றும், பொருளாதார ரீதியாக மீனவர்கள் துன்பப்பட்டு வருகிறார்கள் எனவும், கொடுத்த வாக்குறுதியை திமுக அரசு நிறைவேற்றவில்லை எனவும் குற்றம்சாட்டினார். ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மாண்டஸ் புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்தும், எந்த ஒரு ஆய்வுக்கூட்டமும் நடத்தாமல் முதலமைச்சர் தென்காசிக்கு சுற்றுலா சென்றதாக குற்றம்சாட்டிய அவர், தமிழ்நாடு முதலமைச்சர் பொம்மையாக இருந்து வருவதாக விமர்சனம் செய்தார்.
இதையும் படிக்க: மாண்டஸ் புயல் கடந்து வந்த பாதை...!
நிவாரணம் வழங்க வேண்டும்:
மேலும், மாண்டஸ் புயலால் காசிமேட்டில் 200 படகுகள் சேதம் அடைந்துள்ளதாக கூறிய அமைச்சர், முழுமையாக மூழ்கி சேதமடைந்த படகுகளின் உரிமையாளர்களுக்கு 20 லட்ச ரூபாயும், அனைத்து மீனவர் குடும்பங்களுக்கும் 10 ஆயிரம் ரூபாய் நிவாரணமாக வழங்க வேண்டும் என்றும், இதுகுறித்து குழு ஒன்று நேரில் ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
கேள்வி எழுப்பிய அமைச்சர்:
தொடர்ந்து பேசிய அவர், சென்னை மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்காக தமிழக அரசு நடைப்பாதை அமைத்தது. அந்த நடைப்பாதை தற்போது புயலால் சேதமடைந்தது. இதுகுறித்து பேசிய அமைச்சர், மரப்பலகையில் தான் மாற்றுத்திறனாளிகளுக்கு நடைப்பாதை கட்டுவதா? என்று கேள்வி எழுப்பியதை தொடர்ந்து, உதயநிதி அமைச்சராவது நாட்டிற்கு தேவையில்லாதது எனவும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
மத்திய அரசு அறிவித்த குறைந்தபட்ச ஆதார விலையில் விவசாயிகளிடம் இருந்து கொப்பரை தேங்காயை கொள்முதல் செய்ய தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கி உள்ளது.
சமீபத்தில் நடைபெற்று முடிந்த தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில், 640 கோடி ரூபாய் மதிப்பிலான 56 ஆயிரம் மெட்ரிக் டன் கொப்பறைத் தேங்காயினை மத்திய அரசு அறிவித்த, குறைந்தபட்ச ஆதரவு விலையில் தேசிய வேளாண் கூட்டுறவு விற்பனை இணையத்துடன் இணைந்து கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அதனை செயல்படுத்தும் வகையில் 72 முதன்மை கொள்முதல் நிலையங்களில், தேசிய வேளாண் கூட்டுறவு இணையத்தால் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்ய தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கி அரசாணை வெளியிட்டுள்ளது.
இதையும் படிக்க : அனுமதியின்றி கட்டப்பட்ட 2ம் தளம்...அதிரடி உத்தரவிட்ட நீதிமன்றம்!
இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், 640 கோடி ரூபாய் மதிப்பிலான 56 ஆயிரம் மெட்ரிக் டன் தேங்காய் கொள்முதல் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொள்முதல் முடிந்தவுடன் விலை ஆதரவு திட்டத்திற்காக மாநில அளவிலான ஒருங்கிணைப்பாளரிடம் உள்ள மூலதன நிதியில் இருந்து விவசாயிகளுக்கு மின்னணு பரிவர்த்தனை செய்யப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், கொப்பரை செய்யப்பட்ட தேங்காயினை மத்திய அல்லது மாநில நிறுவனத்திடம் உள்ள கிடங்குகளில் இருப்பு வைக்க வேண்டும் என்றும், கொள்முதல் செய்வதற்கு மாநில அளவிலான ஒருங்கிணைப்பாளர், தேசிய வேளாண் கூட்டுறவு விற்பனை இணையத்தோடு ஒப்பந்தம் செய்திருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த மாதாந்திர முன்னேற்ற அறிக்கையை தமிழ்நாடு அரசிற்கு அனுப்பவும் அரசு உத்தரவிட்டுள்ளது.
ஆவின் பால் விநியோகத்தில் 3-வது நாளாக தொடரும் பிரச்சினை காரணமாக பால் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் புகார் தெரிவித்துள்ளது.
பால் வரத்து சரிவு, தொழிலாளர்கள் வருகை குறைவு உள்ளிட்ட பிரச்சனைகளால் சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் சுமார் ஒரு லட்சம் லிட்டர் பால் வினியோகம் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : அனுமதியின்றி கட்டப்பட்ட 2ம் தளம்...அதிரடி உத்தரவிட்ட நீதிமன்றம்!
தாம்பரம், அடையாறு, வேளச்சேரி, பெருங்குடி உள்ளிட்ட பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இதனை சரி செய்ய ஆவின் நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு பால் முகவர்கள் மற்றும் தொழிலாளர் நலச்சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.
சென்னை போரூரில் உள்ள கட்டடத்தில், அனுமதியின்றி கட்டப்பட்ட இரண்டாவது தளத்தை 8 வாரத்தில் இடிக்க வேண்டுமென மாநகராட்சி ஆணையருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை போரூர் ஜெயபாரதி நகரில் செங்கன் என்பவருக்கு சொந்தமான கட்டத்தில், உரிய அனுமதியின்றி 2வது தளம் கட்டப்பட்டுள்ள நிலையில், அதற்கும்மேல் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் மொபைல் டவர் அமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளதாக கூறி, இதற்கு அனுமதிக்கக்கூடாது என்று சென்னை மாநகராட்சி மற்றும் அரசுக்கு உத்தரவிட வேண்டுமென்ற கோரிக்கையுடன், ஜெயபாரதி நகர் குடியிருப்போர் நலச் சங்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
இதையும் படிக்க : தமிழ்நாட்டில் வாக்காளர் எண்ணிக்கை சரிவு... இந்திய தேர்தல் ஆணையம் பட்டியல் வெளியீடு!
சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி ஆர்.எம்.டி.டீக்காராமன் முன்பு இந்த வழக்கானது விசாரணைக்கு வந்தபோது, கட்டட உரிமையாளர் செங்கன் தரப்பில், இரண்டாவது தளத்தை வரையறை செய்யும்படி, அரசிடம் விண்ணப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், இரண்டாவது தளம் உரிய அனுமதியின்றி கட்டப்பட்டுள்ளது உறுதியாவதால், அந்த தளத்தை 8 வாரத்துக்குள் இடிக்க வேண்டுமென சென்னை மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை ஜூன் 30ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளது.
தமிழ்நாட்டில் வாக்காளர்களின் எண்ணிக்கை 6.20 கோடியில் இருந்து 6.12 கோடியாக சரிந்துள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் 1ஆம் தேதியை தகுதி ஏற்படுத்தும் நாளாக வைத்து, வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி நடைபெற்று வந்தது. ஆனால், தற்போது ஜனவரி 1, ஏப்ரல் 1, ஜுலை 1, அக்டோபர் 1 ஆகிய நாட்களை தகுதி ஏற்படுத்தும் நாளாக வைத்து, இளைஞர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, ஏப்ரல் 1 ஆம் தேதியை தகுதி ஏற்படுத்தும் நாளாக வைத்து கடந்த ஜனவரி 5 ஆம் தேதி முதல் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்த, இடமாற்றம் செய்ய, விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
இதையும் படிக்க : தேனி மாவட்டத்திற்கு முல்லைப்பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் திறப்பு... !
இந்நிலையில் நேற்று வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலின்படி, கடந்த ஐந்து மாதங்களில் மட்டும் 9.11 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. இதில், செங்கல்பட்டு மாவட்டம், சோழியங்கநல்லூர் தொகுதி அதிக வாக்காளர்களை கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண்கள், பெண்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் உட்பட 6.51 லட்சம் வாக்காளர்கள் உள்னர். குறைந்த பட்சமாக சென்னை துறைமுகம் தொகுதியில் ஒரு லட்சத்து 69 ஆயிரத்து 292 லட்சம் வாக்காளர்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், தமிழ்நாட்டில் வாக்காளர்களின் எண்ணிக்கை 6.20 கோடியில் இருந்து 6.12 கோடியாக சரிந்துள்ளதாகவும் இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் முல்லைப்பெரியாறு, திருமூர்த்தி, அமராவதி ஆகிய அணைகளில் இருந்து இன்று தண்ணீர் திறந்து விடப்பட உள்ளது.
பாசனத்திற்காக தமிழ்நாட்டில் உள்ள முல்லைப் பெரியாறு, அமராவதி, திருமூர்த்தி ஆகிய அணைகளில் இருந்து இன்று தண்ணீர் திறந்து விடப்படும் என்று அரசு அறிவித்திருந்தது. அதன்படி, கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14 ஆயிரத்து 707 ஏக்கர், ஆயக்கட்டு பாசன நிலங்களுக்கு முதல் போகத்திற்காக 200 கன அடி வீதமும், தேனி மாவட்ட குடிநீர் தேவைக்காக 100 கன அடி நீர் என, மொத்தம் 300 கனஅடி நீரை முல்லைப்பெரியாறு அணையில் இருந்து இன்று திறந்துவிடப் பட உள்ளது. இன்று முதல் 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படவுள்ள நிலையில், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதையும் படிக்க : சுற்றுப் பயணம் முடித்து சென்னை திரும்பிய முதலமைச்சா் சொன்னது என்ன?
இதேபோல் திருப்பூர் மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள திருமூர்த்தி அணையிலிருந்தும் தண்ணீர் திறந்து விடப்பட உள்ளது. இந்த நீரை ஆதாரமாக கொண்டு கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் 3 லட்சத்து 76 ஆயிரத்து 152 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற உள்ளன.
உடுமலையை அடுத்த அமராவதி அணையில் இருந்தும் இன்று பாசனத்திற்கான தண்ணீர் திறக்கப்பட உள்ளது. இதன் மூலம் திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.