பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஒரு குட் நீயூஸ்...தமிழக அரசின் திடீர் அறிவிப்பு...!

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஒரு குட் நீயூஸ்...தமிழக அரசின் திடீர் அறிவிப்பு...!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருகிற 18-ம் தேதி தமிழ்நாடு முழுவதும் பள்ளி, கல்லூாிகளுக்கு விடுமுறை அளித்து அரசு உத்தரவிட்டுள்ளது.

பொங்கல் விடுமுறை :

தைத்திருநாளை முன்னிட்டு பள்ளி, கல்லூரிகளுக்கு தமிழக அரசு தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை அளிப்பது வழக்கம். அதன்படி, இந்த வருடமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 15 ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை பள்ளி கல்லூரிகளுக்கு தமிழக அரசு விடுமுறை வழங்கி, வரும் 18 ஆம் தேதி மீண்டும் பள்ளி , கல்லூரிகள் திறக்கப்படும் என்று அறிவித்திருந்தது.

இதையும் படிக்க : பாலமேடு ஜல்லிக்கட்டில் 2வது சுற்று ஆரம்பம்...!

மீண்டும் ஒருநாள் விடுமுறை :

இந்நிலையில் சொந்த ஊா்களுக்கு சென்றவா்கள் 4 நாட்கள் விடுமுறை வழங்க வேண்டும் என்று கோாிக்கை விடுத்திருந்தனா். அதனை கருத்தில் கொண்டு ஜனவரி 18-ம் தேதியை பொதுவிடுமுறையாக அறிவித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால், மாணவர்கள் தங்கள் சொந்த ஊரிலிருந்து திரும்பி வருவதற்கு ஏதுவாக அமைந்துள்ளது.