பள்ளி அளவிலான நுழைவுத் தேர்வு,..தமிழக அரசு அறிவிப்பு.! 

பள்ளி அளவிலான நுழைவுத் தேர்வு,..தமிழக அரசு அறிவிப்பு.! 

10-ம் வகுப்பில் மாணவர்களுக்கு ஆல் பாஸ் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், 11-ம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு பள்ளி அளவிலான நுழைவுத் தேர்வை கல்வித்துறை அறிமுகம் செய்துள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த 2020-2021-ம் கல்வியாண்டில் 10-ம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு கொரோனா பேரிடரைக் கருத்தில் கொண்டு All Pass வழங்கப்பட்டது. 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு இதுவரை மதிப்பெண் கணக்கிட்டு வழங்கப்படாத நிலையில், 11-ம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான வழிகாட்டுதல்களை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.

அதில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11-ம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கையை உடனடியாக தொடங்க வேண்டும் என்றும், மாணவர்களின் விருப்பத்துக்கேற்ப பாடப்பிரிவுகளை ஒதுக்கிட வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் உத்தரவிட்டுள்ளார்.

ஏதேனும் குறிப்பிட்ட பிரிவில் அனுமதிக்கப்பட்ட இடங்களை விட, கூடுதலான மாணவர்கள் விண்ணப்பித்தால், 15% வரை மட்டும் அனுமதிக்க வேண்டும் என்றும், மிக அதிகமான அளவில் விண்ணப்பங்கள் வந்தால் பள்ளி அளவில் 50  தேர்வு நடத்தி மாணவர்களை அனுமதிக்க வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

ஜூன் 3-ம் வாரத்துக்குள் வகுப்புகளைத் தொடங்க வேண்டும் என்றும், 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வித்தொலைக்காட்சி வாயிலாகவும், தொலைத்தொடர்பு முறையிலும் பாடங்களை நடத்த வேண்டும் என்றும் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.