கஷ்டப்பட்டு வளர்த்த கட்சி,..இப்படி கண்முன்னாடியே வீணாக அழிகிறதே,.கொரோனா முடிந்து வருவேன்,..சசிகலாவுக்காக காத்திருக்கும் ர.ரக்கள்.!  

கஷ்டப்பட்டு வளர்த்த கட்சி,..இப்படி கண்முன்னாடியே வீணாக அழிகிறதே,.கொரோனா முடிந்து வருவேன்,..சசிகலாவுக்காக காத்திருக்கும் ர.ரக்கள்.!  

சீக்கிரம் வந்துடுவேன் ஒண்ணும் கவலைப்படாதீங்க. கட்சியெல்லாம் சரி பண்ணிடலாம் என்ற சசிகலாவின் ஆடியோவெளிவந்து தற்போது இணையத்தை கலக்கி வருகிறது. தற்போது அதே போல  கொரோனா குறைந்த பின்னர் எல்லாரையும் பார்ப்பேன் என்ற சசிகலாவின் மற்றொரு ஆடியோவும் வெளிவந்துள்ளது. 

நேற்று சமூகவலைத்தளங்களில் லாரன்ஸ் என்ற அதிமுக தொண்டர் தான் சசிகலாவிடம் பேசியதாக ஒரு ஆடியோவை வெளியிட்டிருந்தார். அந்த ஆடியோவில் ’சீக்கிரம் வந்துடுவேன் ஒண்ணும் கவலைப்படாதீங்க. கட்சியெல்லாம் சரி பண்ணிடலாம், ஜாக்கிரதையா இருங்க. நிலைமை வெளிய மோசமா இருக்குப்பா" என சசிகலா பேசியிருந்தார். 

அந்த ஆடியோ வெளிவந்து அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்த மீண்டும் அதிமுக தலைவர்களிடையே மற்றொரு குண்டை போடும் அளவு சசிகலா பேசியதாக இன்னோரு ஆடியோ வெளிவந்துள்ளது. 

அந்த ஆடியோவில் 'கஷ்டப்பட்டு வளர்த்த கட்சி வீணாவதை என்னால் பார்க்க முடியாது. அவர்கள் சண்டை போடுவது மனதிற்கு கஷ்டமாக இருக்கிறது.சீக்கிரம் வருவேன்,கவலைப்பட வேண்டாம். கொரோனா குறைந்த பின்னர் எல்லாரையும் பார்ப்பேன். கட்சிக்குள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டு கொள்வது பார்ப்பதற்கே வேதனையாக இருக்கிறது. சீக்கிரமே நல்ல முடிவுடன் வருவேன்' என சசிகலா கூறியதாக இருக்கிறது.

இந்த இரண்டு ஆடியோக்களும் உண்மையில் சசிகலா பேசியதா? அல்லது அவர் பேசுவது போல யாரும் பேசுகிறார்களா என்ற சர்ச்சையும் எழுந்துள்ளது. இது பற்றி சசிகலாவோ அல்லது அவரது குடும்பத்தினரோ கூறினால் தான் உண்மை வெளியே தெரியவரும்.