கால அளவை மீறி தொழிலாளர்களை வேலை செய்ய நிர்பந்திக்க கூடாது: அமைச்சர் சி.வி.கணேசன் எச்சரிக்கை...

நிர்ணயம் செய்த கால அளவை மீறி தொழிலாளர்களை வேலை செய்ய நிர்பந்திக்கும் நிறுவனங்கள் மீது புகார் அளிக்கலாம் என தொழிலாளர் நலன்துறை அமைச்சர் சி.வி.கணேசன் தெரிவித்துள்ளார்.

கால அளவை மீறி தொழிலாளர்களை வேலை செய்ய நிர்பந்திக்க கூடாது: அமைச்சர் சி.வி.கணேசன்  எச்சரிக்கை...

சென்னை கிண்டியில் உள்ள வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை தலைமை அலுவலகத்தில் ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ய தவறவிட்டவர்களுக்கு புதுப்பிக்க  வாய்ப்பு வழங்கியதன் மூலம் 50 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயனடைந்துள்ளதாக தெரிவித்தார்.

மேலும், தமிழகத்தில் குழந்தை தொழிலாளர்கள் இல்லாத நிலையை உருவாக்க அரசு தொடர்ச்சியாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக கூறிய அமைச்சர், குழந்தை தொழிலாளர்கள் குறித்து 1098 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம் என தெரிவித்தார்.  

இதனை தொடர்ந்து குழந்தை தொழிலாளர்களை ஊக்குவிப்பவர்கள் அல்லது அவர்களுக்கு வேலை வழங்குபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்த அமைச்சர், கொரோனா காலகட்டத்தை காரணம் காட்டி ஆட்குறைப்பு செய்யும் நிறுவனங்கள் மீது புகார் வந்தால் நேரடியாக சென்று விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.