இனி இவங்கெல்லாம் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வரக்கூடாது!

இனி இவங்கெல்லாம் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வரக்கூடாது!

தடுப்பூசி செலுத்தாத வியாபாரிகள் சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டுக்கு வரக்கூடாது என மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.

 

சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டை, சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி, சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

இதனைதொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி, காய்கறி சந்தையில் பாதுகாப்பு விதிகளை பின்பற்றுவது இல்லை என புகார்கள் வந்துள்ளதாகவும், பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பை தீவிரப்படுத்துவது குறித்து ஆலோசனை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும், சந்தையில் உள்ள  வியாபாரிகள், தொழிலாளர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் என அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும், தடுப்பூசி செலுத்தாத வியாபாரிகள் கோயம்பேடு காய்கறி சந்தைக்கு வரக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளதாகவும் கூறினார்.

.