தடுப்பூசி போடாதவர்கள் கோயம்பேடு வணிக வளாகத்தில் அனுமதிக்கப்பட மாட்டர்கள்... மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை!!

அடுத்த 10 நாட்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தாத நபர்கள் கோயம்பேடு வணிக வளாகத்தில் அனுமதிக்கப்பட மாட்டர்கள் என மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்

தடுப்பூசி போடாதவர்கள் கோயம்பேடு வணிக வளாகத்தில் அனுமதிக்கப்பட மாட்டர்கள்... மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை!!
சென்னை கோயம்பேடு வணிக வளாகத்தில் நடைபெறும் தூய்மை பணியை சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆய்வு மேற்கொண்டார்,பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்: ஒவ்வொரு ஞாயிற்றுகிழமைகளில் கோயம்பேடு மார்கெட் வளாகத்தை சுத்தம் செய்யும் பணி இனிமேல் தொடர்ந்து நடைபெறும். ஆனால் முழு நாளும் ஞாயிறன்று மார்கெட்டை மூடினால் காய்கறி, பழங்களின் விலை உயரும் அபாயம் இருப்பதை கருத்தில், கொண்டு ஞாயிற்று கிழமை அன்று மதியம் 12 மணி வரை மட்டும் இயங்கும். அதன் பிறகு 12 மணி முதல் இரவு 8 மணி வரை சுத்தம் செய்யும் பணிகள் நடைபெறும் என்று கூறினார்.
 
மேலும் கோயம்பேடு வணிக வளாகத்தில் தற்போது தடுப்பூசி செலுத்துபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது என்றும் தற்போது வரை 6340 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது என்றும் நாள்தோறும் 600 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது என்று தெரிவித்தார்.
 
மேலும் கோயம்பேடு வணிக வளாகத்தில் அடுத்த 10 நாட்களில் அனைத்து வியாபாரிகளும் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என்றும் அதன்பிறகு தடுப்பூசி செலுத்தாத நபர்கள் கோயம்பேடு வணிக வளாகத்தில் அனுமதிக்கப்பட மாட்டர்கள் என்று தெரிவித்தார்.
 
மே மாதத்தில் 16 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் இந்த மாதத்தில் தற்போது வரை 2500 நபர்களுக்கு எடுக்கப்பட்ட நிலையில் 2 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று கூறினார் மேலும் தடுப்பூசி போடப்படுவதல் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது  என்று கூறிய அவர் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு இருந்தாலும் மக்கள் அதிகம் கூடும் சந்தை பகுதியில் உள்ள வியாபாரிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று கூறினார்.