பாலியல் பலாத்கார பிரிவில் மணிகண்டன் கைது செய்ய தீவிரம்... போலீஸ்க்கு பயந்து வீட்டை பூட்டிவிட்டு தலைமறைவு!!

பாலியல் பலாத்கார பிரிவில் மணிகண்டன் கைது செய்ய தீவிரம்...  போலீஸ்க்கு பயந்து வீட்டை பூட்டிவிட்டு தலைமறைவு!!

நடிகை சாந்தினியை கர்ப்பமாக்கி ஏமாற்றியதாக அளித்த புகாரின் அடிப்படையில் அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது செய்ய வாய்ப்புள்ளதால், அவர் ராமநாதபுரத்தில் உள்ள வீட்டை பூட்டிவிட்டு தலைமறைவாகியுள்ளார்.

மலேசிய பெண்ணான நடிகை சாந்தினி முன்னாள் அ.தி.மு.க அமைச்சர் மணிகண்டன் தன்னை கடந்த 5 ஆண்டுகளாக திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றி கர்மாக்கினார் என சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார். நடிகை சாந்தினியின் புகாரை விசாரித்த போலீசார், முன்னாள் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் மணிகண்டன் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

குறிப்பாக 313- பெண்ணின் அனுமதி இல்லாமல் கட்டாயப்படுத்தி கருவை கலைத்தல்,323 - அடித்து காயம் ஏற்படுத்துதல்,417 - நம்பிக்கை மோசடி,376 - பாலியல் வன்கொடுமை,506 (1) - கொலை மிரட்டல்,67(a) - தகவல் தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல்ஆகிய சட்டப் பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.  

அடுத்த கட்டமாக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது கைது நடவடிக்கை பாய உள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ராமநாதபுரத்தில் உள்ள அவரது வசிப்பிடம் பூட்டப்பட்டு இருப்பதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே கைது நடவடிக்கைக்கு பயந்து முன்னால் அமைச்சர் மணிகண்டன் தலைமறைவாக இருக்கிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.