கர்நாடகாவில் இருந்து மதுபானம் கடத்திய 4 பேர் கைது ..

கர்நாடகாவில் இருந்து மதுபானம் கடத்திய 4 பேர் கைது ..

கர்நாடகாவிலிருந்து தருமபுரிக்கு இருசக்கர வாகனங்களில் மதுபான பாக்கெட்டுகளை கடத்திய 4 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார், இருசக்கர வாகனங்களில் வந்த 4 இளைஞர்களை நிறுத்தி சோதனையிட்டனர்.

இதில், கர்நாடகாவிலிருந்து பெட்டிகளில் மதுபானங்களை கடத்தி வந்த அவர்கள், தருமபுரி மாவட்டம் வேப்பலஅள்ளி கிராமத்தை சேர்ந்த பிரபு, பெருமாள், ராஜ்குமார் மற்றும் சக்திவேல் என்பது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து அவர்கள் 4 பேரையும் கைது செய்த தேன்கனிக்கோட்டை போலீசார், அவர்களிடம் இருந்து இரண்டு இருசக்கர வாகனங்கள் மற்றும் 384 கர்நாடக மதுபான பாக்கெட்டுகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.