உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் 4ஆயிரம் ரசிகர்களுக்கு ஐசிசி அனுமதி…

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் 4ஆயிரம் ரசிகர்களுக்கு ஐசிசி அனுமதி…

இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் 4,000 ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி இங்கிலாந்தில் ஜூன் 18-22 வரை நடைபெற உள்ளது. கொரோனா தொற்று காரணமாக இந்திய அணி வீரர்களுக்கு மூன்று முறை பரிசோதனை நடத்திய பின்னர் இங்கிலாந்து செல்ல உள்ளனர். இந்த நிலையில் இறுதி போட்டியில் 4ஆயிரம் ரசிகர்களை அனுமதிக்கப்பட உள்ளதாக தி ஹாம்ப்ஷைர் கவுன்டி கிளப்பின் தலைவர் ராட் பிரான்ஸ்குரோவ் கூறியுள்ளார்.ஐசிசியும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்துக்கு 4,000 பார்வையாளர்களை அனுமதித்துள்ளது.  இதில் 50 சதவீத டிக்கெட்டுகள் ஐசிசி வசம் சென்றுவிடும். எனவே மீதமுள்ள 2,000 டிக்கெட்டுகளை நாங்கள் விற்பனை செய்வோம். டிக்கெட் குறித்து ஏற்கெனவே ரசிகர்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன என்றார்.