பாஜகவில் இணைய உள்ளார் சச்சின் பைலட்? டெல்லியில் முகாமிட்டுள்ளதால் பரபரப்பு

ராகுல்காந்தியிடம் வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு தீர்வு எட்டப்படாததை அடுத்து, சச்சின் பைலட் கட்சித்தலைவர்களை சந்திக்க டெல்லியில் முகாமிட்டுள்ளார்.

பாஜகவில் இணைய உள்ளார் சச்சின் பைலட்?  டெல்லியில் முகாமிட்டுள்ளதால் பரபரப்பு

அண்மையில் காங்கிரஸ் மூத்த தலைவர்களுள் ஒருவரான ஜிதின் பிரசாதா பாஜகவில் இணைந்ததை அடுத்து, ராஜஸ்தானின் துணை முதல்வரான சச்சின் பைலட்டும் அக்கட்சிக்கு தாவுவார் என கூறப்பட்டது. ஏனெனில், ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க பாஜக முயற்சிப்பதாக தகவல் கசிந்தபோது,  அம்மாநில முதல்வர் அசோக் கெலாட்டின் கீழ் செயல்பட வேண்டுமெனில் தனது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று சச்சின் கோரியிருந்தார்.

இதனை காங்கிரஸ் தலைவர்களான சோனியா, ராகுல் காந்தி ஆகியோர் நிறைவேற்றுவதாக உறுதியளித்திருந்தனர். இதைத்தொடர்ந்து 3 பேர் குழுவும் அமைக்கப்பட்டது. ஆனால் அதன்பின் பல மாதங்களாகியும் இதுவரை எந்த கோரிக்கையும் நிறைவேற்றப்படவில்லை. இந்நிலையில், தனது கோரிக்கைகளை மீண்டும் நினைவூட்ட சச்சின் பைலட், டெல்லி சென்றுள்ளதாக சொல்லப்படுகிறது.