இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு 92 ஆயிரமாக பதிவு !!

இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு 92 ஆயிரமாக பதிவு !!

கடந்த 24 மணி நேரத்தில் 92 ஆயிரத்து 596 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம், நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கையானது 2 கோடியே 90 லட்சத்து 89 ஆயிரத்து 69 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 2 ஆயிரத்து 219 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 3 லட்சத்து 53 ஆயிரத்து 528 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 12 லட்சத்து 31 ஆயிரத்து 415 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 1 லட்சத்து 62 ஆயிரத்து 664 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதன்மூலம் 2 கோடியே 75 லட்சத்து 4 ஆயிரத்து 126 பேர் கொரோனாவிலிருந்து விடுபட்டு குணமடைந்துள்ளனர். அதேபோல், இதுவரை நாடு முழுவதும் 23 கோடியே 90 லட்சத்து 58 ஆயிரத்து 360 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.