10ஆம் வகுப்பு மதிப்பெண் வழங்கும் முறையை மாற்ற கோரி வழக்கு...மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் முறையில் மாற்றம் தேவை என கோரப்பட்ட வழக்கில், மத்திய அரசு பதிலளிக்க டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

10ஆம் வகுப்பு மதிப்பெண் வழங்கும் முறையை மாற்ற கோரி வழக்கு...மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் முறையில் மாற்றம் தேவை என கோரப்பட்ட வழக்கில், மத்திய அரசு பதிலளிக்க டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொரோனா காரணமாக, மாணவர்களிடையே நடத்தப்பட்ட புரிதலுக்கான தேர்வுகளை அடிப்படையாக கொண்டு, 10ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் கடந்த ஆண்டு வெளியிடப்பட்டது.

இந்தநிலையில் இந்த வகை மதிப்பெண் பட்டியல் வெளியிடுவதில் மாற்றம் தேவை என டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

இதனை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிமன்றம், இதுதொடர்பாக பதிலளிக்க சிபிஎஸ்இ, மத்திய அரசு மற்றும் டெல்லி அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.